தனுஷ் அன்று அந்த முடிவை எடுக்கலைனா விமல் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது!. இப்படியும் நடந்துச்சா…
சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படமும் திரை கலைஞர்களுக்கு முக்கியமான திரைப்படம். ஏனெனில் ஒரே ஒரு படம் கூட ஒரு கலைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றி அமைத்துவிடும்.
அது கதாநாயகனாக இருந்தாலும் சரி இயக்குனராக இருந்தாலும் சரி. தனுஷ் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது.
கிராமம் சார்ந்த ஒரு படமாக அது இருந்தது, அப்போது கிராம ரீதியான படங்களில் தனுஷ் நடிக்காத காரணத்தினால் அவர் அந்த படத்தின் கதையை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
மேலும் அது மிக மிக குறைந்த பட்ஜெட் திரைப்படம், பிறகு அந்த கதைதான் விமல் நடித்து பெரும் பெற்று கொடுத்தது. அது வேறு எந்த படமும் இல்லை விமல் நடித்த களவாணி படம்தான். விமலுக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது அந்த படம். ஒரு வேலை அன்று மட்டும் தனுஷ் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் விமலுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கும்.