சான்ஸ் இருந்தா படையப்பா 2 வரும்.. ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் மனசு வைக்கணும்!.
தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் கே.எஸ் ரவிக்குமார் தமிழில் இப்போது பிரபலமாக இருக்கும் அனைத்து நடிகர்களை வைத்தும் கே.எஸ் ரவிக்குமார் திரைப்படம் இயக்கியுள்ளார்.
அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அதில் ரஜினியை வைத்து அவர் இயக்கி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் படையப்பா. படையப்பா திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுதே அதன் மொத்த நேரம் 5 மணி நேரம் வரை இருந்தது.
அதை இரண்டு இடைவெளி வைத்து பெரும்படமாக வெளியிடலாமா? என்று ரஜினி நினைத்தார். ஆனால் கமலஹாசன் அப்படி வெளியிட்டால் ஓடாது என்று கூறியதனால் அந்த படம் எடிட் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்ற பேச்சுக்கள் இருந்து கொண்டே இருந்தன.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் படையப்பா இரண்டாம் பாகம் குறித்து கே.எஸ் ரவிக்குமாரிடம் கேட்டதாக சில வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து கே.எஸ் ரவிக்குமாரிடம் கேட்டுட்ட பொழுது அப்படி எதுவும் சிவகார்த்திகேயன் கேட்கவில்லை என்று கே.எஸ் ரவிக்குமார் கூறினார்.
ஒருவேளை சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தால் நீங்கள் படையப்பா 2 படத்தை எடுப்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது அதற்கான வாய்ப்புகள் இருந்தால் கண்டிப்பாக படையப்பா 2 திரைப்படம் வெளிவரும் என்று கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.
எனவே எதிர்காலத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் படையப்பா பார்ட் 2 படம் வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.