Cinema History
சிவகார்த்திகேயன் வாழ்க்கையை காலி பண்ண பார்த்ததும் அதே தயாரிப்பாளர்தானா!.. வரிசையாக வெளிவரும் உண்மைகள்!..
Actor Sivakarthikeyan : தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து சூர்யா மாதிரியான நடிகர்களுக்கு நிகரான நடிகராக வளர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போராடி தமிழ் சினிமாவில் நடிகராவதற்கான வாய்ப்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியப்போது காமெடி கதாநாயகனாக அறிமுகமானாலும் நாட்கள் செல்ல செல்ல தன்னை ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக வெளிப்படுத்திக்கொண்டார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் ரெமோ படம் வெளியான சமயத்தில் அதன் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் உணர்ச்சி வசப்பட்டு சில விஷயங்களை பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது ஒரு தயாரிப்பாளர் தன்னை வைத்து படம் இயக்க போவதாக கூறி அக்ரிமெண்ட் போட்டு கையெழுத்து வாங்கினார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்த பிறகு படப்பிடிப்பை மட்டும் துவங்காமலேயே இருந்தார் தயாரிப்பாளர்.
அதே சமயம் வேறு திரைப்படங்களிலும் சிவகார்த்திகேயனை கமிட் ஆக விடாமல் செய்துள்ளார். இதனை அந்த மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் அந்த தயாரிப்பாளர் யார் என்கிற விவரத்தை மட்டும் கூறவில்லை. ஆனால் அவர் கூறும்போது நான் யாரை கூறுகிறேன் என சம்பந்தப்பட்ட ஆளுக்கு தெரியும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் அந்த தயாரிப்பாளர் என சமூக வலைத்தளங்களில் ஒரு புது செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே அமீர் விஷயத்தில் ஞானவேல்ராஜாவிற்கு எதிராக அதிகமான குற்றசாட்டுகள் உருவாகி வரும் நிலையில் ஒரு புது குற்றச்சாட்டாக இதுவும் உருவாகியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனே கூறும் வரை எதுவும் வெளிப்படையாக தெரிய வாய்ப்பில்லை.