Connect with us

அந்த தப்ப பண்ணதால பெரிய நடிகர்கள் படத்தை எல்லாம் இழந்திருக்கேன்!.. கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனை!..

karthik subbaraj

Latest News

அந்த தப்ப பண்ணதால பெரிய நடிகர்கள் படத்தை எல்லாம் இழந்திருக்கேன்!.. கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனை!..

cinepettai.com cinepettai.com

தமிழில் குறைந்த நாட்களிலேயே பெரும் இயக்குனர்களாக வளர்ந்த இயக்குனர்களில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமானவர். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக சினிமாவிற்கு வந்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் முதன்முதலாக நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து வந்தார். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே கார்த்திக் சுப்புராஜிற்கு ஒரு பிரச்சனை இருந்தது.

அவருக்கு ஒரு படத்தின் கதையை சுவாரசியமாக தயாரிப்பாளரிடம் சொல்லத் தெரியாது. இது மிகப்பெரிய பிரச்சனையாகும். ஏனெனில் ஒரு இயக்குனர் கதையை சுவாரஸ்யமாக சொல்வதை வைத்துதான் தயாரிப்பாளர் அந்த படத்தை தயாரிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் எங்கே சென்றாலும் கதையை சுருக்கமாகவே கூறி விடுவாராம். இதனாலேயே அவரது முதல் படத்திற்கான வாய்ப்புகள் மிக தாமதமாகவே கிடைத்தன என்று பேட்டியில் கூறியுள்ளார். முதன் முதலாக ஜிகர்தண்டா திரைப்படத்திற்கான கதையைதான் எழுதி வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சுவாரஸ்யமாக கூறாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர் சி வி குமாரை பொறுத்தவரை அவர் கதையை கேட்பதைவிட எழுதி வைத்திருக்கும் திரை கதையை வாங்கி படித்து விடுவாராம் அப்படி படித்த காரணத்தினால் தான் கார்த்திக் சுப்புராஜிற்கு அவரது முதல் படமான பீட்சா படத்திற்கு சி.வி குமாரிடம் வாய்ப்பு கிடைத்தது.

அதற்குப் பிறகும் கூட பல முறை கதை சொல்லத் தெரியாத காரணத்தினால் பெரும் இயக்குனர்களின் படத்தை தவறவிட்டிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

POPULAR POSTS

virat kohli
taapsee
sathyaraj
itachi uchiha
kamalhaasan indian 2
poonam bajwa
To Top