Connect with us

அடுத்து எடுக்கப்போற ரஜினி படம் வரைக்கும் எல்லா கதையையும் அஞ்சு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன்!.. உண்மையை கூறிய லோகேஷ்!.

rajinikanth lokesh kanagaraj

Latest News

அடுத்து எடுக்கப்போற ரஜினி படம் வரைக்கும் எல்லா கதையையும் அஞ்சு வருஷம் முன்னாடியே எழுதிட்டேன்!.. உண்மையை கூறிய லோகேஷ்!.

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் எந்த ஒரு இயக்குனரும் இவ்வளவு குறைவான காலத்தில் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு ஒரு வரலாறை படைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

திறமையுள்ள இயக்குனர் நினைத்தால் வெகு சீக்கிரத்தில் எவ்வளவு பெரிய ஹீரோவை வைத்து வேண்டுமானாலும் படம் இயக்க முடியும் என்பதை தற்சமயம் அவர் நிரூபித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து படங்கள் எடுத்துக்கொண்டே இருக்கிறார்.

அவருக்கு கதைகள் எழுதுவதற்கு கூட நேரமில்லை, இருந்தாலும் எப்படி தொடர்ந்து படம் இயக்குகிறார் என்ற கேள்வி பலரிடம் இருந்து வந்தது. உதாரணத்திற்கு இப்போதுதான் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்தார் அடுத்து உடனே ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து சூர்யாவிற்கு ஒரு படமும் கைதி படத்தின் இரண்டாம் பாகமும் விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் என தொடர்ந்து படங்கள் எடுக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இதற்கெல்லாம் கதை எழுதுவதற்கு நேரம் வேண்டும் அல்லவா? இதையெல்லாம் எப்போது எழுதுவார் லோகேஷ் கனகராஜ் என்று ஒரு கேள்வி இருந்தது.

இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த லோகேஷ் கனகராஜ் 2015 ஆம் ஆண்டு நான் மாநகரம் திரைப்படத்தை இயக்கிவிட்டேன். அதன் பிறகு எனது இரண்டாவது படமான கைதி படத்தை 2018 ஆம் ஆண்டு தான் இயக்க துவங்கினேன்.

இதற்கு நடுவே மூன்று வருடம் எனக்கு இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியில் எனக்கு எந்த கதையெல்லாம் படமாக எடுக்க ஆவலாக இருந்ததோ அவற்றையெல்லாம் எழுதி வைத்து விட்டேன். அப்படிதான் மாஸ்டர், லியோ, அடுத்து ரஜினியை வைத்து எடுக்கப் போகும் திரைப்படம் இவை எல்லாவற்றையுமே எழுதினேன் என்று கூறியுள்ளார் லோகேஷ். எனவே லோகேஷ் நடிகர்களுக்கு தகுந்தார்போல கதை எழுதுகிறார் என்கிற ஒரு பெயர் ரொம்ப காலமாக இருந்தது. அதை அது தவறு என்று நினைக்கும் விதமாக தற்சமயம் இந்த பேட்டி அமைந்துள்ளது.

POPULAR POSTS

sree leela
modi sathyaraj
vengat prabhu goat
gv prakash ar rahman
sathyaraj ks ravikumar
tamil actress
To Top