Connect with us

மலை பாதையில் போய் காணாமல் போன அஜித்!.. பதறி போய் கதறி அழுத ஷாலினி… சிக்கலில் சிக்கிய இயக்குனர்!.

ajith shalini

Cinema History

மலை பாதையில் போய் காணாமல் போன அஜித்!.. பதறி போய் கதறி அழுத ஷாலினி… சிக்கலில் சிக்கிய இயக்குனர்!.

cinepettai.com cinepettai.com

Ajithkumar: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழில் தொடர்ந்து இவர் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் காதல் செய்து திருமணம் செய்துக்கொண்ட ஜோடிகளில் அஜித் ஷாலினியும் முக்கியமானவர்கள். அஜித்திற்கு ஷாலினிக்கும் இடையே அமர்களம் திரைப்படத்தின்போதே காதல் ஏற்பட்டது.

ஆனால் அந்த படத்தின் இயக்குனரான சரணிற்கு இந்த காதல் விவகாரங்கள் அப்போது தெரியாது. அவர் வழக்கமாக மற்ற நடிகர்களை வேலை வாங்குவது போலவே இவர்கள் இருவரையும் நடிக்க வைத்து கொண்டிருந்தார். ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே ஷாலினி அஜித்தின் பெரும் ரசிகராக இருந்தார்.

அதனாலேயே அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒரு மலைப்பகுதியில் படப்பிடிப்பு ஒன்று நடத்த வேண்டி இருந்தது. அதற்காக படப்பிடிப்பு குழுவினர் கிளம்பியப்போது அஜித்தும் சரணும் ஒரு காரில் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

amarkalam
amarkalam

ஷாலினி மற்றும் மற்ற படக்குழுவினர் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். இந்த நிலையில் வெகு நேரமாகியும் சரணையும் நடிகர் அஜித்தையும் காணவில்லை. எனவே அவர்களுக்கு போன் செய்து பார்த்துள்ளார் ஷாலினி ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அது ஆபத்தான மலைப்பாதை என்பதால் நேரம் ஆக ஆக ஷாலினிக்கு அதிக கவலை வர துவங்கியுள்ளது. பிறகு தாமதமாக அஜித்தும் சரணும் படப்பிடிப்பு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்போது அங்கு கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டிருந்தார் ஷாலினி. கோபமாக வந்த ஷாலினி எதற்காக அஜித் என்னிடம் ஒருமுறை கூட இடையில் போன் செய்து பேசவில்லை என கடிந்துக்கொண்டார்.

அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் இந்த அளவு நெருக்கம் உள்ளதா என அறிந்திருக்கிறார் இயக்குனர் சரண். இந்த நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

To Top