முதல் படத்தின்போது தயாரிப்பாளர் என்னை அவமானப்படுத்தினாலும், ஒரு விஷயத்தில் சந்தோஷமா இருந்துச்சு!.. உண்மையை கூறிய இயக்குனர் சரண்.

Director Saran : தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் இயக்குனர் சரண். பொதுவாக இயக்குனர்கள் சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களை வைத்துதான் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடிப்பார்கள்.

ஆனால் அப்போது சில இயக்குனர்கள் அதற்கு விதிவிலக்காக இருந்தனர் விக்ரமன் மாதிரியான சில இயக்குனர்கள் தொடர்ந்து காதல் திரைப்படங்களைக் கொண்டு மக்களிடம் வெற்றியை கண்டு வந்தனர். அப்படி மக்கள் மத்தியில் காதல் திரைப்படத்தை கொண்டு வெற்றியை கண்ட இன்னொரு இயக்குனர் சரண்.

சரணின் முதல் திரைப்படம் காதல் மன்னன். காதல் மன்னன் திரைப்படம் எப்படிப்பட்ட வெற்றியை கொடுத்தது என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஆனால் அந்த திரைப்படத்திற்கு வாய்ப்பு பெற சென்ற பொழுது மிகவும் கஷ்டப்பட்டார் என்பதை இயக்குனரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

kadhal mannan
kadhal mannan
Social Media Bar

இந்த திரைப்படத்திற்கு கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான் தயாரிப்பாளராக இருந்தார். கதையை சொல்வதற்காக எஸ் தாணுவை பார்க்க போகும் போதெல்லாம் அவர் சரணை உதாசீனப்படுத்தி இருக்கிறார். எப்போதும் பார்க்காமலே இருந்திருக்கிறார்.

இருந்தாலும் கூட அங்கு இருக்கும் வாட்ச்மேன்தான் தன்னை முதன்முதலாக இயக்குனர் என்று ஒப்புக்கொண்டதாக சரண் ஒரு பேட்டியில் கூறுகிறார். ஒரு முறை சரண் வெகு நேரம் காத்திருந்ததை பார்த்துவிட்டு அந்த வாட்ச்மேன் எஸ் தாணுவிற்கு போன் செய்து ஒரு இயக்குனர் உங்களுக்காக வெகு நேரமாக காத்திருக்கிறார் சார் என்று கூறிய பொழுது தன்னையும் ஒரு இயக்குனராக அங்கீகரித்துவிட்டனர் என்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

அதுதான் தொடர்ந்து போராடி என்னை ஒரு இயக்குனர் ஆவதற்கும் உத்வேகம் கொடுத்தது என்று சரண் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.