கோலிவுட்டில் குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். பெரும்பாலும் அவர் இயக்கும் திரைப்படங்களில் கார்ப்பரேட் வில்லன் என்றெல்லாம் இருக்காது. குடும்ப பிரச்சனைகளுக்கு நடுவே ஒரு கதைக்கருவை வைத்து அதை வைத்தே திரைப்படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார்.
இந்த நிலையில் சேரன் இயக்கத்தில் அப்போது வந்த திரைப்படம் பொற்காலம். முரளி கதாநாயகனாக நடித்த அந்த திரைபப்டத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் திரைப்படம் குறித்து அப்போது விமர்சனம் அளித்து வந்தார்.

அது சின்ன திரையில் ஒரு நிகழ்ச்சியாக நடைப்பெற்று வந்தது. ஆனால் அந்த டிவி சேனல் சொல்லும் விஷயத்தைதான் ஜேம்ஸ் வசந்தன் அப்படியே சொல்லி வந்தார். இந்த நிலையில் பொற்காலம் திரைப்படம் குறித்து கொஞ்சம் எதிர்மறையான கருத்தை தெரிவித்தார் ஜேம்ஸ் வசந்தன். ஆனால் உண்மையில் ஜேம்ஸ் வசந்தனுக்கு அந்த திரைப்படம் பிடித்திருந்தது.
இதனால் கோபமான சேரன் நேராக அந்த தொலைக்காட்சி அலுவலகத்திற்கே வந்துவிட்டார். பிறகு ஜேம்ஸ் வசந்தனிடம் நீங்கள் கண்டிப்பாக அந்த ரிவ்யூவை கொடுத்திருக்க மாட்டீர்கள் என தெரியும் என்று கூறிவிட்டு டிவி சேனலிடம் இனி இப்படி செய்யாதீர்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார் என அந்த நிகழ்ச்சி குறித்து பகிர்ந்துள்ளார் சேரன்.






