Cinema History
தம்பி அந்த மாதிரி இருந்தா உன்கிட்ட பேசவே மாட்டேன்!.. கருத்து கேட்ட நடிகரிடம் கலவரம் செய்த நடிகர் நாகேஷ்!..
கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் காமெடிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது இருப்பதை விடவும் டாப் காமெடி நடிகர்கள் அப்போதைய சினிமாவில் இருந்தனர். நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சந்திரபாபு இப்படி எக்கச்சக்கமான காமெடி நடிகர்கள் அப்போது இருந்தனர்.
அவர்களுக்குள் போட்டியும் இருந்தது. அப்படியான நிலையில் தனிப்பட்டு நிற்பதற்காக ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் சிறப்பாக ஒன்றை செய்ய வேண்டி இருந்தது. அதில் தனித்துவமான நடிகராக நாகேஷ் இருந்து வந்தார். சந்திரபாபு போலவே நாகேஷும் தனித்துவமான உடல் மொழியை கொண்டுள்ளார்.
தனது அங்க அசைவின் மூலமாகவே காமெடி பண்ண தெரிந்தவர் நாகேஷ். நாகேஷ் இறுதியாக நடித்த திரைப்படம் 23 ஆம் புலிக்கேசி. இந்த திரைப்படம் குறித்து நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். புலிக்கேசி படத்திற்காக விழா நடந்தப்போது வி.எஸ் ராகவனையும் நாகேஷையும் மட்டும் யாருமே கண்டுக்கொள்ளவில்லை.
எனவே அவரை நான் சந்தித்து பேசி கொண்டிருந்தேன். அப்போது ஏதாவது அவரிடம் பேச வேண்டுமே என்பதற்காக சார் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். எதிர்காலத்தின் சிறந்த சேமிப்பு இறந்த காலத்தின் நினைவுகளேன்னு படிச்சேன். அதை பத்தி என்ன நினைக்கிறீங்க என கேட்டார் இளவரசு.
அதற்கு பதிலளித்த நாகேஷ் இறந்த காலத்தை நினைத்து கொண்டிருந்தால் நான் இப்படி இருக்கமாட்டேன். திருவிளையாடல் காலத்தில் நடித்து கொண்டிருந்த நாகேஷாக இருந்தால் இப்படி உன்னிடம் அமர்ந்து பேசி கொண்டிருப்பேனா என கேட்டுள்ளார் நாகேஷ். இந்த விஷயத்தை இளவரசு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.