Tamil Cinema News
குஷ்பு வரலைனா அந்த நடிகையை கல்யாணம் பண்ணியிருப்பேன்.. அதிர்ச்சி கொடுத்த சுந்தர் சி..!
தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்து வருகிறது.
நிறைய இயக்குனர்கள் காமெடி திரைப்படங்கள் இயக்குவதற்கு நினைத்தாலும் இயக்குனர் எழில், சுந்தர் சி மாதிரியான ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து நல்லப்படியான காமெடி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.
தற்சமயம் பேய் படங்கள் மற்றும் காமெடி திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருக்கிறார் சுந்தர் சி. சுந்தர் சி முறைமாமன் திரைப்படத்தை இயக்கியப்போது அவருக்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே காதல் உண்டானது.
அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதற்கு பிறகு இப்போது வரை அவர்கள் நல்லப்படியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மற்ற சினிமா பிரபலங்கள் போல இடையிலேயே இவர்கள் விவாகரத்து செய்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுந்தர் சி பேசிய சில விஷயங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன. அதில் சுந்தர் சி கூறும்போது ஒருவேளை நான் குஷ்புவை திருமணம் செய்யவில்லை என்றால் நடிகை சௌந்தர்யாவைதான் திருமணம் செய்திருப்பேன்.
சௌந்தர்யா மிகவும் நல்லவர் என கூறியுள்ளார் சுந்தர் சி. இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அருணாச்சலம் திரைப்படத்தில் சௌந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.