Connect with us

மேக்கப் இல்லாம பார்த்தா உன்ன யாருக்கும் பிடிக்காது!. செல்பி எடுத்த பெண்ணால் மனைவியிடம் திட்டு வாங்கிய துல்கர் சல்மான்..

dulquer salmaan

Latest News

மேக்கப் இல்லாம பார்த்தா உன்ன யாருக்கும் பிடிக்காது!. செல்பி எடுத்த பெண்ணால் மனைவியிடம் திட்டு வாங்கிய துல்கர் சல்மான்..

cinepettai.com cinepettai.com

டெல்லிக்கே ராஜானாலும் பல்லிக்கு புள்ளதான என ஒரு படத்தில் வசனம் வரும் அதுப்போல என்னதான் நடிகர்கள் ஊருக்கே பெரும் பிரபலமாக இருந்தாலும் கூட அவர்கள் வீட்டில் அவர்கள் ஒரு சாதாரண மனிதர்கள் தான்.

பொதுவாக அதிகமாக இளம் பெண்களை கவரும் நடிகர்கள் தங்கள் மனைவியிடம் அதிகமாக திட்டு வாங்குவது உண்டு. நடிகர் சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் கூறும் பொழுது எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவர் நடித்த பொழுது அதில் வா வா என் வெளிச்ச பூவே வா என்கிற ஒரு பாடலை சற்று ரொமான்டிக்காக செய்திருப்பார்.

அந்த பாடலை கடைசி வரை அவரது மனைவி பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த அளவிற்கு மனைவிகள் கணவர்களை தங்களின் உடைமைகளாக பார்ப்பது உண்டு. இந்த நிலையில் நடிகர் நடிகர் துல்கர் சல்மானும் இதே போல அதிகமான இளம் பெண்கள் ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராவார்.

அவரிடம் இது குறித்து கேட்கும் பொழுது என் மனைவி யாராவது ஒரு பெண் என்னிடம் செல்பி எடுக்க வந்தாலே யார் அந்த பொண்ணு எதற்காக உன்னிடம் வந்து செல்பி எடுக்கிறார் என்று கேட்பார். நான் வீடுகளில் தூங்கி காலை நேரங்களில் எழும் பொழுது முடியெல்லாம் கலைந்து மோசமாக இருப்பேன்.

அப்போது என்னை பார்க்கும் மனைவி இந்த நேரத்தில் உன்னை பார்க்கும் எந்த பெண் ரசிகர்களுக்கும் உன்னை பிடிக்காது என்று தனது மனைவி திட்டுவதாக தனது பேட்டியில் நகைச்சுவையாக கூறியிருந்தார் துல்கர் சல்மான்.

To Top