Cinema History
உங்களுக்கு ரூட்டு தல சிவாஜின்னு ஒருத்தர் இருக்காரு சார்!.. எஸ்.ஜே சூர்யா கேள்விக்கு பதில் கொடுத்த ரசிகர்கள்!..
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகனாக மாறியவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனராக இருந்தபோதும் சரி நடிகராக இருந்தபோதும் சரி. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்தார் எஸ்.ஜே சூர்யா.
ஆனால் அன்பே ஆருயிரே திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. அதனை தொடர்ந்து சில வருடங்கள் சினிமாவை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எஸ்.ஜே சூர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இறைவி திரைப்படம் அமைந்தது.
இறைவி திரைப்படத்திற்கு பிறகு ஸ்பைடர் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அதனை தொடர்ந்து இவர் வில்லனாக நடித்த தொடங்கினார் எஸ்.ஜே சூர்யா. தற்சமயம் அவர் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது.
கிட்டத்தட்ட 100 கோடியை தொட்ட மார்க் ஆண்டனி திரைப்படம் விஷால் எஸ்.ஜே சூர்யா மற்றும் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மூவருக்குமே ஒரு ரீ என்ட்ரி திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது இதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் ஹீரோ இருவருமே டபுள் ஆக்டிங் ஆக நடித்து எந்த படமும் வந்ததில்லை இதுதான் முதல் முறை என்று கூறினார் எஸ் ஜே சூர்யா.
ஆனால் இதற்கு முன்பே மூன்று சிவாஜி கணேசன் இரண்டு எம்.ஆர் ராதா என்ற காம்போவில் பலே பாண்டியா என்கிற சிவாஜி கணேசனின் படம் வெளியாகி இருக்கிறது. இதனை கூறி உங்களுக்கு முன்பே சிவாஜி இதையெல்லாம் செய்து விட்டார் என்று நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.