Connect with us

வைரமுத்துவை அப்படி சொல்லி இருக்க கூடாது.. சின்மயியிடம் நேருக்கு நேர் பேசிய கங்கை அமரன்.!

Tamil Cinema News

வைரமுத்துவை அப்படி சொல்லி இருக்க கூடாது.. சின்மயியிடம் நேருக்கு நேர் பேசிய கங்கை அமரன்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக புகழ் பெற்ற ஒரு பாடகியாக இருந்தவர் பாடகி சின்மயி. வைரமுத்து எழுத்துக்களில் பல பாடல்களை சின்மயி பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்படத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக மீ2 என்கிற பிரச்சனை உலக அளவில் இருந்தது. அந்த சமயத்தில் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிப்படையாக கூறினார் பாடகி சின்மயி.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார் எந்த ஒரு தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்களும் சின்மயிக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சின்மயி இப்பொழுது வரை தமிழில் பாடல்கள் பாடாமல் இருந்து வருகிறார்.

ஆனால் மற்ற மொழிகளில் அவருக்கு பாடுவதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் கங்கை அமரன் மற்றும் சின்மயி இருவரும் கலந்து கொள்ளும் பேட்டி ஒன்று நடைபெற்றது.

அதில் பேசிய கங்கை அமரன் கூறும் பொழுது வைரமுத்து ஒரு ஆகச் சிறந்த கவிஞர் அவருடைய பாடல்கள் எல்லாம் சிறப்பானதாக இருக்கும் அந்த அளவிற்கு சிறந்த கவிஞர் என்றாலும் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது.

அவர் ஒரு என்னுடைய நண்பர் என்பதற்காக இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக என்னால் பேச முடியாது, வைரமுத்துவை இப்படி பேசியிருக்க கூடாது என சின்மயியை கூற முடியாது என்று வெளிப்படையாகவே சின்மயிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் கங்கை அமரன்.

ஏற்கனவே இளையராஜாவுக்கும் கங்கை வைரமுத்து விற்கும் இடையே பிரச்சனை இருந்தது என்பதால் கூட கங்கை அமரன் இப்படி பேசியிருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

To Top