Latest News
கண்டவுடன் காதல்… அப்புறம் ரூமுக்குதான்!.. இந்த கால காதலை விவரிக்கும் இயக்குனர் கௌதம் மேனன்!..
மணிரத்தினத்திற்குப் பிறகு தமிழில் காதல் திரைப்படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் மேனன். கௌதம் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து நிறைய காதல் திரைப்படங்களை எடுத்திருக்கிறார் கௌதம் மேனன். முதலில் காதல் திரைப்படங்கள் எடுத்தாலும் போக போக க்ரைம் திரைப்படங்கள் மீதுதான் அதிக ஆர்வம் காட்டினார். அப்படி அவர் இயக்கிய என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்கள் அப்போது நல்ல வெற்றியைப் பெற்றன.
க்ரைம் திரைப்படங்களை இயக்கும் அதே சமயம் அதில் காதல் காட்சிகளையும் வெகு சிறப்பாக வைத்திருப்பார் இயக்குனர் கௌதம் மேனன். அதே போல காதல் கதையை பொறுத்தவரை விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்கள் சிறப்பான காதல் கதையாக அமைந்துள்ளன.
கௌதம் மேனன் கொடுத்த விளக்கம்:
பொதுவாக கௌதம் மேனன் திரைப்படங்களில் அதிகமாக மணிரத்தினம் படத்தின் சாயல்களை பார்க்க முடியும். அதற்கு காரணமும் உண்டு சின்ன வயது முதலே கௌதம் மேனன் மணிரத்தினத்தின் பெரும் ரசிகராக இருந்தார். அதனால் முதலில் மணிரத்தினத்திடம்தான் உதவி இயக்குனராக சேர நினைத்தார்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைப்போல் காக்க என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும்போது இதிலும் காதல் கதை உள்ளதா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் இதில் காதலை கொஞ்சம் குறைத்துள்ளோம். பார்த்தவுடனே இருவருக்குள்ளும் காதல், அடுத்த காட்சியிலேயே படுக்கையறை காட்சி என வைத்துள்ளோம் என்றார் கௌதம் மேனன். ஏன் இப்படி காட்சிகள் அமைந்துள்ளன என அவர் விளக்கும்போது இப்போது காதல் அப்படிதானே இருக்கிறது. சந்திக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் நம்பிக்கைதான் அப்படியான நெருக்கத்தை தருகிறது என அவர் கூறியிருந்தார்.