அஜித் படத்துல எஸ்.கே நடிச்சா இதான் நடக்கும்.. கலாய்த்துவிட்ட இயக்குனர் ஹெச்.வினோத்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள் மட்டும் வைத்து சாதாரண கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் ஒருவகை என்றால் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை ஆய்வு செய்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.

அப்படியான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் ஹெச். வினோத் முக்கியமானவர். மக்கள் மத்தியில் நடைபெறும் மோசடி குறித்து மிக விரிவாக பேசும் ஒரு திரைப்படமாக அவர் இயக்கிய திரைப்படம்தான் சதுரங்க வேட்டை.

அதே போல வட இந்தியாவில் இருக்கும் கொள்ளை கும்பல் குறித்து ஆய்வு செய்து அவர் இயக்கிய திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படி ஹெச்.வினோத் இயக்கும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் முக்கியமான விஷயத்தை பேசும் படமாக இருக்கும்.

Social Media Bar

ஹெச்.வினோத் ஓப்பன் டாக்:

துணிவு திரைப்படத்தில் கூட வங்கிகளில் நடக்கும் மோசடிகள் குறித்து நிறைய பேசியிருந்தார். ஆனால் பெரிய ஹீரோக்களை வைத்து ஹெச்.வினோத் திரைப்படம் இயக்கத் துவங்கிய பிறகு அவர் இந்த மாதிரியான விஷயங்களை திரைப்படங்களில் அதிகம் பேசுவதை விடவும் அந்த பெரிய ஹீரோக்களுக்கு மாஸ் காட்டுவதற்காக நிறைய காட்சிகளை சேர்க்க வேண்டி இருந்தது.

அந்த மாற்றங்களை அவர் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கிய பொழுதே பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசும் பொழுது அஜித்தை வைத்து திரைப்படம் எடுத்ததால்தான் அதில் நிறைய பாடல்களை வைத்தீர்களா? அல்லது வேறு ஹீரோவை வைத்து படம் எடுத்தாலும் இப்படிதான் பாடல் வைப்பீர்களா என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த ஹெச் வினோத் ஒருவேளை இந்த படத்தில் நான் அஜித்துக்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்திருந்தால் இதைவிட இரண்டு பாடல்கள் அதிகமாக வைத்திருப்பேன். என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இதன் மூலம் பெரிய ஹீரோக்களை வைத்து ஹெச்.வினோத் படம் எடுக்கும் பொழுது அவர்களுக்காக படத்தின் விஷயங்களை மாற்றி அமைக்கிறார் என்று வெளிப்படையாக தெரிகிறது.