Connect with us

காலைல அஞ்சு மணி நேரம் மேக்கப் போட்டும் அசையாத கமல்!.. அசந்து போன படக்குழு!.

kamalhaasan

Cinema History

காலைல அஞ்சு மணி நேரம் மேக்கப் போட்டும் அசையாத கமல்!.. அசந்து போன படக்குழு!.

cinepettai.com cinepettai.com

சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். அதற்கு பல காரணங்களும் உண்டு. சிவாஜி கணேசனுக்கு பிறகு அவரை போலவே சினிமாவில் சிறப்பான நடிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய நடிகராக கமல்ஹாசன் இருந்தார்.

இதனாலேயே கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாக இருந்தன. நடிகர் இளவரசு தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிப்புரிந்திருக்கிறார். மிக தாமதமாகவே அவர் மக்கள் மத்தியில் நடிகராக அறிமுகமானார்.

அவர்  ஒரு பேட்டியில் கூறும்போது கமல்ஹாசனின் நடிப்பு குறித்து கூறியிருந்தார். ஒரு கைதியின் டைரி என்கிற திரைப்படத்தில் வீர சிவாஜியின் சிலையாக கமல்ஹாசன் நடிக்க வேண்டும். இதற்காக அவருக்கு ஐந்து மணி நேரம் மேக்கப் செய்துள்ளனர்.

மேக்கப் செய்துக்கொண்ட பிறகு கமல்ஹாசன் அங்கு சிலை போல அமர்ந்திருக்க அவரது முகத்தில் ஒரு எறும்பு சென்று கொண்டிருக்கும். பொதுவாக சிலை வேஷம் போட்டிருந்தாலும் முகத்தில் ஒரு பூச்சி செல்லும்போது ஒரு அசைவு நம்மை அறியாமலே வந்துவிடும்.

ஆனால் அப்படி எந்த ஒரு அசைவையும் காட்டாமல் கமல் சிலை போலவே அமர்ந்திருப்பார். நடிப்பின்போது எப்படி ஒரு ஈடுபாடு இருந்தால் அந்த காட்சியை அவர் அப்படி நடித்திருப்பார் என்கிறார் இளவரசு.

To Top