Connect with us

இசைக்கு பாடல் வரிகள் தேவை கிடையாது… வைரமுத்து கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்த இளையராஜா..

vairamuthu ilayaraja

News

இசைக்கு பாடல் வரிகள் தேவை கிடையாது… வைரமுத்து கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்த இளையராஜா..

Social Media Bar

சமீபத்தில் வைரமுத்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது ஒரு பாடலுக்கு இசை முக்கியமா அல்லது பாடல் வரிகள் முக்கியமா என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுத்து இருந்தார். அது கூட அதிக சர்ச்சையாகி வந்தது. அதில் வைரமுத்து பேசும்பொழுது ஒரு உடல் இன்றி உயிர் மட்டும் செயல்படாதோ அதே மாதிரி பாடல் வரிகள் இன்றி பாடல்கள் ம்ட்டும் செயல்படாது.

ஒரு பாடலை பாட வேண்டும் ஒருவர் என்றால் அதற்கு பாடல் வரிகள் தேவைப்படுகிறது. இசை மட்டும் இருந்தால் அதை யாரும் பாட்டு என்று அழைப்பதில்லை இசையுடன் சேர்ந்து பாடல் வரிகள் இருந்தால் தான் அவற்றை பாடல் என்று அழைக்கிறார்கள் என்று பெரும் விளக்கமே கொடுத்திருந்தார்.

வைரமுத்துவின் பேச்சு:

எனவே இரண்டும் இருந்தால்தான் அதற்கு பெயர் பாடல் என்பது வைரமுத்துவின் கருத்தாக இருந்தது. இதனைக் கேட்ட இயக்குனர் கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசும் பொழுது வைரமுத்து தன்னை தூக்கி விட்டவர்களையே மிதிக்க நினைக்கிறார் பலசை எல்லாம் அவர் மறந்துவிட்டார் .

Vairamuthu-1
Vairamuthu-1

திரும்ப இந்த மாதிரி பேசிக் கொண்டிருந்தால் அது அவருக்கு சரியாக இருக்காது என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முன்பே இளையராஜா ஒரு வீடியோவில் பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பாடல் வரிகள் ஒரு பாட்டிற்கு முக்கியமா இசை முக்கியமா என்ற அதே கேள்வியை பார்த்திபன் இளையராஜாவிடம் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த இளையராஜா வரிகள் இல்லாமல் ஒரு இசை இருக்கும்.

இளையராஜா விளக்கம்:

ஆனால் இசை இல்லாமல் பாடல் வரிகளை மட்டும் வைத்து பாடலை செய்ய முடியாது. உதாரணத்திற்கு நான் ஒரு இசையமைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்த இசை உங்கள் நினைவில் இருக்கும் பாடல் வரிகளை இல்லாத இசையாக இருந்தாலும் அந்த இசை உங்கள் நினைவில் இருக்கும்.

ilayaraja
ilayaraja

ஆனால் ஒரு கவிதையை கவிதையாக சொன்னால் அது உணர்வோடு உணர்வுடைய ஒரு விஷயமாக இருக்காது அதை இசையை கலந்து பாடலாக மாற்றும் பொழுதுதான் அதை பாடுகிறார்கள். அது மனதில் இருக்கிறது எனவே வரிகளாக இருந்தாலும் அது வெறும் வரிகளாக இருக்கும் பொழுது அதற்கு பெரிதாக மதிப்பு கிடைப்பதில்லை.

ஆனால் இசையை பொருத்தவரை இசை தனித்து இயங்கினாலும் அதற்கு அதிக மதிப்பு கிடைக்கும் என்று கூறுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

Articles

parle g
madampatty rangaraj
To Top