Latest News
அந்த விஷயத்தை பண்ணுனா மட்டும் விஜய் இடத்தை பிடிக்க முடியுமா!.. எஸ்.கேவுக்கு மார்க்கெட் இவ்வளவுதான்!.. விநியோகஸ்தர் ஓப்பன் டாக்!..
தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களாக இருந்த விஜய் மற்றும் அஜித் இருவரின் சினிமா பயணமும் முடிவுக்கு வந்து விடுமோ என்கிற கேள்வி தற்சமயம் எழுந்திருக்கிறது. விஜய்யை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு சென்று இருப்பதால் 2026 தேர்தல் வரை நடிப்பேன் என்றும் பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விடுவேன் என்றும் விஜய் கூறியிருக்கிறார்.
அஜித்தை பொருத்தவரை அவர் உலகத்தை இரு சக்கர வாகனத்திலேயே சுற்றிவர வேண்டும் என்கிற பெரும் ஆசையை கொண்டிருப்பதால் அதற்காக சினிமாவை விட்டு விலக போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழின் உச்சபட்ச நடிகர் விஜய் அஜித் இருவருமே சினிமாவை விட்டு விலகும் பொழுது அந்த இடத்தை யார் பிடிப்பார்கள் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் விஜய் கேரளாவிற்கு படபிடிப்பிற்கு சென்ற பிறகு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்காக ஒரு மீட்டிங் தயார் செய்ததாக கூறப்படுகிறது. பொதுவாக இந்த மாதிரியான சந்திப்புகளை விஜய்தான் ஏற்பாடு செய்வது வழக்கம்.
சிவகார்த்திகேயன் செய்த செயல்:
அந்த விஷயத்தை சிவகார்த்திகேயன் செய்கிறார் எனில் சிவகார்த்திகேயனும் விஜய்யின் இடத்தை பிடிக்க பார்க்கிறாரா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து பதில் அளித்த பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் தனுஷ் சூர்யா சிம்பு விக்ரம் போன்ற அனைத்து நடிகர்களுக்கும் சினிமாவில் தற்சமயம் ஒரே அளவிலான மார்க்கெட் தான் இருக்கிறது.
அதில் சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை தொடும் அளவிற்கு தனித்துவமாக இன்னும் மாறவில்லை எனவே அவர்களால் இப்பொழுது விஜய் இடத்தில் எல்லாம் பிடிக்க முடியாது. அப்படி விஜய் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அவர்கள் அதற்கு நன்றாக நடிக்க வேண்டும் கடுமையாக உழைக்க வேண்டுமே தவிர ரசிகர்கள் சந்திப்புகளை நடத்துவதன் மூலம் ஒருத்தர் விஜய்யின் இடத்தை கண்டிப்பாக பிடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.