Latest News
சின்ன பிள்ளைகளை பாடாய் படுத்துறதில் ப்ரோயஜனம் இல்லை!.. தளபதி ஆக்கப்பூர்வமா சிந்திக்கணும்!.. அட்வைஸ் கொடுத்த பத்திரிக்கையாளர்!.
அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை தளபதி விஜய் பல காலங்களாகவே எடுத்து வருகிறார். இவ்வளவு நாள் மறைமுகமாக கூறி வந்தவர் தற்சமயம் லியோ வெற்றி விழாவில் வெளிப்படையாகவே கூறிவிட்டார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் இடம் பிடிப்பதற்கு பல விஷயங்களை விஜய் செய்து வருகிறார்.
இடையில் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஒரு விழாவை நடத்தினார் விஜய். இவர் தொடர்ந்து மாணவர்களின் கல்வி மீது தற்சமயம் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாணவர்களுக்கான மாலை மற்றும் இரவு பள்ளிகளை சில இடங்களில் தளபதி விஜய் நிறுவியுள்ளார் என கூறப்படுகிறது.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக விஜய் போட்டியிடுவார் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர். இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தனன் கூறும்போது விஜய் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால் ஏற்கனவே பள்ளியில் அசந்து படித்துவிட்டு வரும் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி கொடுப்பது அவர்களுக்கு சோர்வைதான் ஏற்படுத்தும்.
எனவே அதற்கு பதிலாக எதிர்காலத்தில் வரும் அரசு தேர்வுகள், போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் வகையில் நீட்,டி.என்.பி.எஸ்.சி, போன்ற தேர்வுகள் தொடர்பாக பயிற்சி கொடுக்கும் பள்ளிகளை நிறுவலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்தணன்.