Bigg Boss Tamil
என்ன பேச்சு பேசியிருக்கீங்க எல்லோரும்!.. போட்டியாளர்கள் உண்மை முகத்தை தோலுரித்த பிக்பாஸ்!..
போன வாரம் எலிமினேஷன் நடந்தது முதலே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக சுவாரஸ்யமாக மாறி வருகிறது. பொதுவாக பிக்பாஸ்தான் யார் எலிமினேஷன் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பார். ஆனால் இந்த முறை கமல்ஹாசனுக்கும் ரெட் கார்டு என்னும் ஒரு விஷயம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கமல்ஹாசன் யாராவது ஒரு நபரை நீக்க வேண்டும் என நினைத்தால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து நீக்க முடியும். அப்படியாக தற்சமயம் போட்டியாளர் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து நீக்கியுள்ளார் கமல்ஹாசன்.
இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுக்காப்பில்லை என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பிரதீப்பை நீக்கியுள்ளனர். ஆனால் ஏற்கனவே ப்ளான் செய்து இந்த பெண்கள் எல்லாம் சேர்ந்துதான் பிரதீப்பை பிக்பாஸில் இருந்து நீக்கியுள்ளனர் என்று அவர்கள் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
மேலும் தனிநபரை உருவக் கேலி செய்கிறார் என்று கூல் சுரேஷ் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் தற்சமயம் பிக்பாஸ் வீட்டில் உள்ள பலருமே அந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது தெரிகிறது.
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் போட்டியில் இன்று ஒரு புது வித டாஸ்க் தரப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக்பாஸில் கூறிய கடும் சொற்களை திரையிட்டு அவற்றை ஏன் கூறினார்கள் என்கிற காரணத்தை கூற வேண்டும். அதில் வினுஷாவை பற்றி நிக்ஷன் மிகவும் தரக்குறைவாக பேசியிருப்பது தெரிகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் இப்படி தங்கள் வார்த்தைகளாலேயே சிக்கியுள்ளனர்.