Cinema History
வடிவேலுவை அந்த மாதிரி பார்த்தப்போ கண் கலங்கிட்டேன்!.. மனதை திறந்த பிரபு தேவா!..
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் அவர் அளவிற்கு யாரும் வெகு காலம் காமெடி நடிகராக இருந்தது கிடையாது. அந்த அளவிற்கு தொடர்ந்து சினிமாவில் பல வகையான காமெடிகளை கொடுத்துள்ளார் வடிவேலு.
அவரது பல திரைப்பட காமெடிகள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவை எந்த படம் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படி பெயர் தெரியாத திரைப்படங்களில் கூட வடிவேலுவின் காமெடி பிரபலமாகிவிடும். இந்த நிலையில் காமெடியை தாண்டி வேறு எந்த கதாபாத்திரத்திலும் வடிவேலு நினைத்தது கிடையாது.
ஆனால வடிவேலுவால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை அறிந்த மாரி செல்வராஜ் அவரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படமும் வெகுவாக பாராட்டை பெற்றது.
அந்த படம் குறித்து பிரபு தேவா ஒரு பேட்டியில் கூறும்போது வடிவேலு முகத்தை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும். பொதுவாக தமிழ் மக்களுக்கும் அப்படிதான். இப்படியிருக்கும்போது காமெடியே இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு எப்படி நடிப்பார் என்கிற கேள்வி எனக்கு இருந்தது.
ஆனால் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்த பிறகு உண்மையில் நான் கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். இவ்வளவு நாள் நட்பில் இருந்தும் இவருக்கு இப்படி ஒரு நடிப்பு வரும் என்று நான் தெரிந்துக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.