Bigg Boss Tamil
நீயெல்லாம் ஏழைன்னு சொல்லாத!. ஜோவிகாவை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரதீப்!..
Jovikha: ஆரம்பித்த நாள் முதல் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டுள்ளது பிக் பாஸ் சீசன் 7. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை உளவியலாகவே இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்குள் வன்முறையை வன்மத்தை ஏற்படுத்தி விடும் வகையில்தான் டாஸ்களே இருக்கும்.
அதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாராவது ஒருவரிடம் மனக்கசப்போ அல்லது பகையையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே ஆரம்பத்தில் சுமூகமாக ஆரம்பித்தாலும் கூட போகப் போக டிவி சீரியல்கள் போல மோசமாக மாறிவிடும் பிக் பாஸ் நிகழ்ச்சி.
அந்த வகையில் தற்சமயம் வைத்த டாஸ்கின் காரணமாக பிரதீப் மற்றும் ஜோவிகாவிற்கு இடையே பெரும் சண்டை ஏற்பட்டு உள்ளது. வரிசையாக நம்பர் போட்ட பலகையை வைத்து அதில் முதலிடத்திற்கு பெரும் போட்டியை ஏற்படுத்தி வைத்தார் பிக்பாஸ்.
அதில் முதலிடத்தில் பிரதீப் நின்றார். அவரிடம் அதைக் கேட்டு பலரும் வந்தபோது அவர்களிடம் தாக்குப் பிடிக்க வேண்டும் இதுவே டாஸ்க். இப்படி இருக்கும் போது ஜோவிகா வந்து நான் மிகவும் மிடில் கிளாஸில் இருந்து வந்தவர் என பிரதிப்பிடம் கூற இதனால் கடுப்பான பிரதீப் நீயெல்லாம் மிடில் க்ளாஸ்ன்னு சொல்லி மக்களை ஏமாத்தாதே. நீயே ஏழை என்றால் சட்டையே இல்லாமல் இருக்குறவங்கள என்ன சொல்றது என கேட்டுள்ளார். மேலும் கெட்ட வார்த்தையில் அவரை திட்டியுள்ளார்.
ஏனெனில் பிரதீப், கூல் சுரேஷ் போன்றோர் உண்மையிலேயே ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் ஜோவிகாவின் பேச்சு அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஜோவிகாவின் தாத்தா, அம்மா என எல்லோரும் பெரும் பணக்காரர்கள் ஆவர். இருந்தாலும் அவர் ஜோவிகாவை திட்டியது தவறு என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.