Bigg Boss Tamil
ஜோவிகா எப்போதும் தூங்க இதுதான் காரணம்!.. வனிதா கூறியதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!.. புதுசால இருக்கு!.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே போட்டியாளராக இருந்தவர் நடிகை வனிதா விஜய்க்குமார். அவர் பிக்பாஸிற்கு வருவதற்கு முன்பு வரை அவரை யார் என்றுக்கூட பலருக்கும் தெரியாது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக வனிதா பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து அவரின் மகள் ஜோவிகாவிற்கு நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நடிகை ஆக வேண்டும் என்றால் முதலில் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும். அதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என கருதிய வனிதா அவரை பிக்பாஸிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் பிக்பாஸிற்கு சென்ற ஜோவிகா அங்கு அதிகமாக தூங்கி கொண்டே இருக்கிறார். எப்போது பார்த்தாலும் தூக்கம் என்று இருக்கிறது. இந்த நிலையில் தினசரி பிக்பாஸ் குறித்து விமர்சனம் அளித்து வரும் வனிதாவிடம் ஏன் ஜோவிகா இப்படி தூங்குகிறார் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வனிதா கூறும்போது ஜோவிகா பொதுவாகவே மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானால் தூங்க சென்றுவிடுவார். நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டால் தூங்க சென்றுவிடுவேன். அதைதான் அவரும் செய்கிறார் என கூறியுள்ளார்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் என்ன ஜாலியாகவா இருக்கின்றனர். அங்கு இருக்கும் ஒவ்வொரு நபரும் மன கஷ்டத்தில்தான் இருக்கின்றனர் அப்போது அவர்கள் எல்லாம் ஏன் தூங்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.