Connect with us

ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் நடிகை!.. கேரவனில் நடந்த சம்பவம்..

kajal-agarwal

Latest News

ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் நடிகை!.. கேரவனில் நடந்த சம்பவம்..

தமிழில் பழனி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். பெரும் தொழிலதிபரின் மகளான காஜல் அகர்வாலுக்கு இளமை காலங்கள் முதலே சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில்தான் கல்லூரி படிப்பை முடித்த காஜல் அகர்வால் மாடலிங் துறையில் சேர்ந்தார்.

வட இந்தியாவை சேர்ந்த காஜல் அகர்வால் முதலில் ஹிந்தி படங்களில்தான் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு அங்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. இதனை தொடர்ந்து அவர் தமிழில் கதாநாயகியாகிய பழனி திரைப்படத்தில் அறிமுகமானார்.

திருமணம்:

அதனை தொடர்ந்து தமிழில் அதிக பட வாய்ப்புகளை பெற்றார் காஜல் அகர்வால். அதற்கு பிறகு மற்ற நடிகைகளை போலவே இவரும் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு குறைவாகவே திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் குழந்தை பிறந்தப்பிறகு அவர் சந்தித்த அவதிகளை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் கூறும்போது “எனக்கு திருப்பதியில் ஒரு இடத்தில் படப்பிடிப்பு இருந்தது. அங்கு வெப்பம் கொஞ்சம் அதிகம். அப்போது எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருந்தது.

குழந்தைக்கா செய்த வேலை:

அந்த வெப்பத்தை எனது குழந்தை தாங்காது என்பதால் அதனை சில கிலோமீட்டர்கள் தாண்டி வேறொரு இடத்தில் தங்க வைத்தேன். ஆனால் குழந்தைக்கு தாய் பால் கொடுக்க வேண்டியது முக்கியம். எனவே எனது கேரவனுக்கு சென்று தாய் பால் எடுத்து  அதை ட்ரைவரிடம் கொடுத்துவிடுவேன்.

அவர் இரண்டு மணி நேரம் பயணித்து அதை என் குழந்தைக்கு கொடுத்துவிட்டு மீண்டும் இரண்டு மணி நேரம் பயணித்து என்னிடம் வந்து மீண்டும் தாய்ப்பாலை வாங்கி செல்வார்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக முக்கியம். அதனால்தான் அப்படியான நிலையிலும் அவர்களிடம் அதை சரியாக சேர்த்தேன் என்கிறார் காஜல் அகர்வால்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

balakrishna vijay
sivanghi
gauri kishan
To Top