Latest News
லவ் டுடே இயக்குனர் பண்ணுன அந்த தப்பை பண்ணிட கூடாதுன்னு நினைச்சேன்!.. ஓப்பனாக கூறிய கார்த்திக் சுப்புராஜ்!..
தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரடியாக குறும்படங்கள் எடுத்துவிட்டு அடுத்து இயக்குனரானவர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கிய முதல் திரைப்படமான பீட்சா திரைப்படமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக எடுத்த ஜிகர்தண்டா திரைப்படம் தேசிய விருதை பெற்றது. எனவே கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக மாறினார். கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்கு வந்த அதே காலகட்டத்தில் பலரும் அவரைப் போலவே குறும்படம் மூலமாகவே தமிழ் சினிமாவிற்கு வந்தனர்.
அப்படி தமிழ் சினிமாவிற்கு வந்த மற்றொரு நபர் பிரதீப் ரங்கநாதன். தமிழில் கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன் .குறும்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் பேசும் பொழுது கிட்டத்தட்ட பிரதீப் ரங்கநாதனை குறிக்கும் விதத்தில் ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.
பொதுவாக குறும்படம் எடுப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அதன்படிதான் குறும்படத்தை எடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு எதிர்காலத்தில் எடுக்க போகும் பெரிய படத்தின் கதையை வைத்து குறும்படத்தை எடுக்கக் கூடாது.
ஏனெனில் குறும்படத்திற்கான பட்ஜெட் என்பதும் நேரம் என்பதும் மிகவும் குறைவு என்று கூறினார் கார்த்திக் சுப்புராஜ். எனவே நான் எடுக்கும் எந்த ஒரு குறும்படத்தையும் எதிர்காலத்தில் ஒரு பெரிய படமாக எடுக்க கூடாது என்பதில் நான் தீவிரமாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.
ஏனெனில் பிரதீப் ரங்கநாதன் ஒரு காலத்தில் குறும்படமாக எடுத்த திரைப்படத்தை தான் பிறகு லவ் டுடே என்று பெரிய படமாக எடுத்தார் அப்படி படங்களை எடுப்பது தவறு என்று தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.