Tamil Cinema News
உங்களுக்கு வெக்கமா இல்லையானு என் பிள்ளைகள் கேட்டாங்க… மனம் திறந்த சுந்தர் சி.!
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எப்போதுமே காமெடி இயக்குனர்களுக்குதான் அதிக பஞ்சமாக இருந்து வருகிறது. ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படமான முறை மாமன் திரைப்படத்தில் இருந்தே தொடர்ந்து அதிக வெற்றி படங்களையே கொடுத்து வருகிறார்.
காமெடி படங்களுக்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் சி. தற்சமயம் அரண்மனை மாதிரியான பேய் படங்களைதான் அவர் இயக்கி வருகிறார்.
சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்திலேயே கதாநாயகியாக நடித்தவர் நடிகை குஷ்பு. அப்போதில் இருந்தே குஷ்புவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதற்கு பிறகு குஷ்புவுக்கு உடல் எடை அதிகரித்தது. அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகினார். இந்த நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் குஷ்பு.
அதனை தொடர்ந்து சுந்தர் சியிடம் பழைய குஷ்பு புகைப்படத்தை பார்க்கும்போது மீண்டும் காதல் மலர்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி எனக்கு இப்போதும் குஷ்பு மீது அதே காதல் இருக்கிறது. எங்கள் காதலை பார்த்து எங்கள் பிள்ளைகளே வெக்கமா இல்லையா என கேட்பார்கள் என கூறியுள்ளார் சுந்தர் சி.
