Tamil Cinema News
ரஜினி சாரால் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன்.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்..!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகனான யோகேஷ் கனகராஜ் அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
ஆனால் திரைத்துறைக்கு வந்து அவருக்கு நான்காவது திரைப்படமே கமல்ஹாசனை வைத்து இயக்குவதற்கு கிடைத்தது. அந்த படத்திலும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்பொழுது ரஜினி குறித்து அவர் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். தற்சமயம் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அவர் கூறும் பொழுது ரஜினிகாந்த் சாரை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். ரஜினிகாந்தின் நிறைய திரைப்படங்களை நான் ரசித்து பார்த்து இருக்கிறேன். ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தை பார்த்தபோது அதில் ரஜினியை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் காட்சி ஒன்று வரும்.
அதை பார்த்து நான் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன். பிறகு வளர்ந்த பிறகு எல்லா வகையான சினிமாவையும் பார்க்க துவங்கிய பிறகுதான் நான் கமலஹாசனுக்கு மிகப்பெரிய ரசிகன் ஆனேன்.
ஆனால் கமல்ஹாசனுக்கு முன்பே எனக்கு பிடித்த நடிகராக ரஜினிகாந்த் தான் இருந்தார் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
