Tamil Cinema News
விஜய் படத்துல பண்ணுன அந்த தப்ப ரஜினி படத்துல பண்ண மாட்டேன்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் டீசண்டான வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் கைதி.
கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்க்கு பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து மூன்றாவது படமே விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தையும் அதற்கு பிறகு கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தையும் இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.
லியோ திரைப்படத்திற்கு பிறகு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியப்போதே அந்த படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டோம்.
அதனால் அந்த படத்தை சீக்கிரம் முடிக்க வேண்டி இருந்தது. அந்த மாதிரி அடுத்த படங்களுக்கு பண்ண கூடாது என முடிவு செய்தேன் என கூலி திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
