Connect with us

ஏ.ஐ முறையில் விஜயகாந்த் நடிக்கும் அடுத்தடுத்து இரண்டு படங்கள்.. மீண்டும் போலீசாக களம் இறங்கும் கேப்டன்..!

Tamil Cinema News

ஏ.ஐ முறையில் விஜயகாந்த் நடிக்கும் அடுத்தடுத்து இரண்டு படங்கள்.. மீண்டும் போலீசாக களம் இறங்கும் கேப்டன்..!

Social Media Bar

நடிகர் விஜயகாந்த் இறந்த பிறகு அவரைக் குறித்த நிறைய விஷயங்கள் மக்களுக்கு வெளிப்படையாக தெரிய துவங்கியது. முக்கியமாக திரைத்துறைக்கு விஜயகாந்த் ஆற்றிய பங்கு என்பது மிக அதிகமானது.

அதற்கு நன்றி செய்யும் விதமாக தொடர்ந்து விஜயகாந்தை நிறைய திரைப்படங்களில் இப்பொழுது பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர் உதாரணத்திற்கு கோட் திரைப்படத்தில் முதல் காட்சியில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை கொண்டு வந்திருப்பார்கள்.

ஆனால் அது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஆனால் லப்பர் பந்து திரைப்படத்தில் விஜயகாந்தை மரியாதை செய்யும் வகையில் நிறைய காட்சிகள் இருந்தது. அதில் கெத்து என்னும் கதாபாத்திரத்தை விஜயகாந்த் ரசிகராக வைத்து படம் முழுக்க விஜயகாந்தின் பாடல்கள் விஜயகாந்தின் புகைப்படங்கள் என்று பயன்படுத்தி இருப்பார்கள்.

vijayakanth

vijayakanth

விஜயகாந்த் நடிப்பில் படம்:

இப்படியாக விஜயகாந்துக்கு நன்றி செலுத்த துவங்கி இருக்கின்றனர் திரைத்துறையினர். இந்த நிலையில் விஜயகாந்தை வைத்து ஊமை விழிகள் படத்தை இயக்கிய ஆபாவணன் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை வைத்து ஊமை விழிகள் பாகம் 2 படத்தை இயக்க இருப்பதாக கூறி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அவர் ஏ.ஐ முறையை நன்றாக செய்யும் பட்சத்தில் படம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் ரமணா விஜயகாந்தை கொண்டு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

எளிய முறையில் மிகச் சிறப்பாக அதை செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த விஷயத்தால் இப்பொழுது படை தளபதி திரைப்படத்தின் மீது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top