Connect with us

கல்யாணத்துக்கு வந்தது ஒரு குத்தமா!. அனிரூத்தை வைத்து செய்த ஆர்கெஸ்ட்ரா குழு..

aniruth

News

கல்யாணத்துக்கு வந்தது ஒரு குத்தமா!. அனிரூத்தை வைத்து செய்த ஆர்கெஸ்ட்ரா குழு..

Social Media Bar

ஒரு காலத்தில் தமிழில் ஏ.ஆர் ரகுமான் எப்படி மொத்த தமிழ் சினிமாவையும் ஆக்கிரமித்து வைத்திருந்தாரோ அதேபோல தற்சமயம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபராக இசையமைப்பாளர் அனிருத் இருக்கிறார். எந்த ஒரு பெரிய ஹீரோக்கள் திரைப்படமாக இருந்தாலும் அதற்கு இசையமைப்பாளராக அனிருத் இருப்பதை பார்க்க முடிகிறது.

கிட்டத்தட்ட தொடர்ந்து தமிழில் வரும் ஜெயிலர்,லியோ,ஜவான் என அனைத்து படங்களும் அனிருத் இசையமைக்கும் படங்களாக இருக்கின்றன. இதை அடுத்து பாலிவுட்டிலும் தற்சமயம் இசையமைக்க துவங்கியுள்ளார் அனிருத்.

சினிமாவிற்கு அறிமுகமான பொழுது அனிருத்துக்கு இதே மாதிரி வரிசையாக வாய்ப்புகள் வந்தன. ஆனால் இமான் போன்ற இசையமைப்பாளர்கள் வந்த பிறகு அனிருத்தின் மார்க்கெட் கொஞ்சம் குறைந்தது. அதன் பிறகு கொஞ்ச நாட்கள் அனிருத்துக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்து கொண்டிருந்தன.

தற்சமயம் தமிழ் சினிமாவில் அனிருத்துக்கு போட்டியாக இன்னோரு இசையமைப்பாளர் இல்லாத அளவிற்கு அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கியுள்ளன. ஒரு பேட்டியில் அனிருத்திடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த மோசமான விஷயம் ஏதாவது உண்டா? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அனிருத் ஒருமுறை ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பாடல் குழு ஒன்று இருந்தது அந்தக் குழு அன்று மொத்தம் பத்து பாடல்கள் பாடியது. நான் அந்த விழாவிற்கு வந்திருப்பதை அறிந்து அந்த பத்து பாடல்களுமே நான் பாடிய பாடல்களாக பாடினார்கள்.

அதை என்னால் கேட்கவே முடியவில்லை ஏண்டா அந்த திருமணத்திற்கு சென்றோம் என்று ஆகிவிட்டது அதுதான் என் வாழ்க்கையிலேயே நடந்த மோசமான விஷயம் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார் அனிருத்.

பொதுவாக கல்யாண நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி கச்சேரிகளில் பல பேர் இந்த கஷ்டத்தை அனுபவித்து உள்ளோம் என்று நெட்டிசன்களும் தங்கள் அனுபவங்களை கூறி வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top