Cinema History
அந்த ஒரு பாட்டு முன்னாடி திருக்குறளே நிக்க முடியாது!.. என்.எஸ்.கேவே பார்த்து வியந்துபோன பாடல்!..
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் நாடகங்களை பின்பற்றியே சினிமாவும் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நாடகங்களை அப்படியே படம் பிடித்து அவற்றை திரைப்படமாக வெளியிட்டு வந்தார்கள் என்று கூறலாம். அப்பொழுது நாடகங்களில் பெரும்பாலும் கருத்து பாடல்கள்தான் பாடல்களாக இருக்கும்.
மக்களுக்கு நல்ல நல்ல செய்திகளை கூறக்கூடிய பாடல்களைதான் அதில் பாடுவார்கள். எனவே அதையும் சினிமாவிற்கு அப்படியே கடத்தினார்கள் சினிமாவில் அனைத்து படங்களிலும் அப்போது அதிகமாக கருத்து பாடல்களை நாம் பார்க்க முடியும்.
அதுவும் கலைவாணன் என் எஸ் கிருஷ்ணன் காலகட்டங்களில் சினிமாவின் துவக்க காலம் என்று கூறலாம். எனவே அப்போது இன்னுமுமே அதிகமாக இந்த கருத்து பாடல்கள் இருந்தன. அப்போது ஒரு கருத்து பாடலை கேட்ட என் எஸ் கிருஷ்ணன் இந்த பாடல் 1330 திருக்குறளை விட சிறந்தது என்று கூறினார்.
வாலி கண்ணதாசன் போன்ற கவிஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்த தஞ்சாவூர் ராமையாதாஸ் என்பவர் எழுதிய பாடல்தான் அது ஒரு சான் வயிறு இல்லாட்டா இந்த உலகில் என்ன கலாட்டா, என்கிற அந்த பாடலில் சமகாலத்தில் இருந்த பட்டினி சாவு குறித்து சிறப்பாக எழுதி இருந்தாராம் ராமையா தாஸ் எனவே அதை அவ்வாறு புகழ்ந்திருந்தார் என் எஸ் கிருஷ்ணன்.
