Latest News
விஜய் பையன் இயக்குனராக இதுதான் காரணம்!. இப்படி உருட்டுருங்களே பி.வாசு சார்!. கலாய்த்த நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அறிமுகமாவது ஒன்றும் புதிது கிடையாது. இரண்டு தலைமுறைகளாகவே இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் இதுக்குறித்து இயக்குனர் பி,வாசு பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய் மகன் இயக்குனராவதை முதலில் என்னிடம் கூற வேண்டும் என்று ஆசைப்பட்டார் சுபாஷ்கரன்.
எனவே சஞ்சய்யை அழைத்துக்கொண்டு எனது அலுவலகத்திற்குதான் அவர் முதலில் வந்தார். ஆனால் அப்போது நான் அங்கு இல்லை. அதே போல ஜேசன் சஞ்சய் விஜய்யின் மகன் என்பதால் மட்டும் சுபாஷ்கரன் அவருக்கு வாய்ப்பு வழங்கிடவில்லை. இதற்கு முன்னர் சஞ்சய் ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். அந்த குறும்படம் நன்றாக உள்ளதாக நானும் கேள்விப்பட்டேன்.
அதை பார்த்தப்பிறகுதான் லைகா நிறுவனம் விஜய் மகனை இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளது. உண்மையில் சஞ்சய் விஜய் மகனாக இல்லாமல் இருந்திருந்தாலும் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என கூறியிருந்தார் பி.வாசு.
லைக்கா ஒரு பெரும் தயாரிப்பு நிறுவனமாகும். அது இதுவரை எந்த ஒரு அறிமுக இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்ததே இல்லை. ஆனால் விஜய் மகனுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறது என்றால் அது விஜய் மகன் என்னும் காரணத்தால்தானே, அப்படியிருக்கையில் எதற்கு இயக்குனர் பி.வாசு இப்படி மூடி மறைக்கிறார் என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.