Connect with us

அது ஓடிருக்க வேண்டிய படமாச்சே!.. பஞ்சு அருணாச்சலத்திற்கே டஃப் கொடுத்த எம்.எஸ்.வி படம்!..

MSV panju arunachalam

Cinema History

அது ஓடிருக்க வேண்டிய படமாச்சே!.. பஞ்சு அருணாச்சலத்திற்கே டஃப் கொடுத்த எம்.எஸ்.வி படம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல புது முகங்களை சினிமாவிற்கு கொண்டு வந்து அவர்களை பெரிதாக வளர்த்துவிட்டவர் வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம். சினிமா துறையில் உள்ள அனைத்துமே அவருக்கு அத்துப்படி என கூறலாம். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் முதலில் அவரை போலவே கவிதைகள் எழுத துவங்கினார்.

பிறகு அதன் மூலமாக சினிமாவிற்கு வந்தவர் சினிமாவில் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டார். முக்கியமாக மக்களின் ரசனையை கற்றுக்கொண்டார் பஞ்சு அருணாச்சலம். இப்போது உள்ள பிரபலங்கள் இயக்குனர்களால் கூட முடியாத விஷயம் அது.

ஏதாவது ஒரு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டால் அதற்கு முன்பு அதை பஞ்சு அருணாச்சலத்திடம் போட்டு காட்டுவதை பல தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக கொண்டிருந்தன. அவர் அந்த படத்தில் எது மக்களுக்கு பிடிக்காது, எது பிடிக்கும் என கூறிவிடுவார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனரான ஸ்ரீதர் எழுதிய கதை ஒன்றை ஒருமுறை கண்ணதாசனிடம் பகிர்ந்துக்கொள்ள வந்தார். அப்போது அங்கு பஞ்சு அருணாச்சலமும் இருந்தார். பொதுவாக சுருக்கமாக கதை சொல்லும் ஸ்ரீதர் அந்த கதையை மட்டும் வெகு நேரம் கூறி கொண்டிருந்தார்.

கலைக்கோயில் (kalaikovil) என்ற அந்த திரைப்படத்தை எம்.எஸ்.வி தயாரிக்க இருந்தார். இந்த கதை பஞ்சு அருணாச்சலத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக படம் வெற்றியடையும் என அவர் நினைத்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை தரவில்லை.

இது பஞ்சு அருணாச்சலத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே அவரே சென்று அந்த படத்தை பார்த்தார். அதில் சில பிரச்சனைகள் இருந்ததை அப்போதுதான் பஞ்சு அருணாச்சலம் கவனித்தார். அதன் பிறகு அதை திருத்தி பஞ்சு அருணாச்சலம் ஒரு திரைக்கதை எழுதினார். அந்த அளவிற்கு திரைப்படங்களின் நுட்பங்களை அறிந்தவராக பஞ்சு அருணாச்சலம் இருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top