Connect with us

நயன்தாரா பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்லை!.. முதல் படத்துக்கு நாந்தான் ஹெல்ப் பண்ணுனேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

nayanthara mala parvathy

Cinema History

நயன்தாரா பத்தி நீங்க நினைக்கிறது உண்மையில்லை!.. முதல் படத்துக்கு நாந்தான் ஹெல்ப் பண்ணுனேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை!.

cinepettai.com cinepettai.com

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் குறைவான நபர்களே. அதிகபட்சம் வட இந்தியாவில் இருந்து வந்த நடிகைகளுக்குதான் தமிழ் சினிமாவில் நிறைய மதிப்புகள் கிடைத்திருக்கின்றன.

அப்படியே மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து பிரபலமான ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார்.

ஆனால் அவர் முதன் முதலில் தமிழில் படம் நடிக்க வந்த பொழுது அவருக்கு தமிழே தெரியாது என்று கூறப்படுகிறது. மலையாளத்தில் மூன்று திரைப்படங்கள் நடித்த பிறகு 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நயன்தாரா.

அதன் பிறகு அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதற்கு நடுவே மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்தார். பிறகு தொடர்ந்து தமிழில் அதிக படங்களில் நடிக்க தொடங்கினார்.

நயனுக்கு உதவிய நடிகை:

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு  சின்னத்திரை மற்றும் விருது வழங்கும் விழாக்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அப்போதுதான் அவருக்கு முதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நிலையில் மலையாளத்தில் நடிகையாக இருந்த பார்வதி மாலா என்பவருடன் நயன்தாராவிற்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே அவரை அழைத்து இரண்டு  திரைப்படங்களின் இயக்குனர் பெயரையும் கூறி அதில் எந்த இயக்குனர் திரைப்படத்தில் நடித்தால் எனக்கு வெற்றி கிடைக்கும் என்று கேட்டிருக்கிறார் நயன்தாரா.

அதற்கு பார்வதி மாலாவும் ஒரு இயக்குனரின் பெயரை சொல்லி நடிக்கச் சொல்லவே அந்த திரைப்படத்திலேயே நயன்தாராவும் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் நயன்தாராவுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகு பார்வதி மாலாவை நயன்தாரா சந்திக்கவே இல்லை.

பிறகு பல வருடங்கள் கழித்து சில மாதங்களுக்கு முன்பு பார்வதி மாலாவை எதேர்ச்சையாக பார்த்திருக்கிறார் நயன்தாரா. எப்படியும் நயன்தாரா நம்மை நினைவு வைத்திருக்க மாட்டார் என்று நினைத்து அவரை கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறார் பார்வதி மாலா.

அதனை கண்ட நயன்தாரா அவரை நிறுத்தி நீங்கள் பார்வதிமாலா தானே நாம் இருவரும் ஒரு டிவி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்டோம் நினைவிருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு அவர் எப்படி பேசினாரோ அதேபோலவே எளிமையாக பேசியினார்.

இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறிய பார்வதி மாலா கூறும் பொழுது பலரும் நயன்தாரா மிகவும் மோசமானவர் என்றும் யாரிடமும் முகம் கொடுத்து பேச மாட்டார் என்றும் கூறி வருகின்றனர் ஆனால் அதெல்லாம் பொய். அவர் பழையபடிதான் இப்பொழுதும் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top