Cinema History
சிங்கிள் ஷாட்ல நடிக்கணும்!.. முடியுமா.. பார்த்திபனுக்கு சிவாஜி கணேசன் கொடுத்த டாஸ்க்!..
நடிகர் சிவாஜி கணேசனை பொருத்தவரை அவரின் சினிமா வாழ்க்கையை இரண்டு வகையான வாழ்க்கையாக பிரிக்கலாம். முதல் கட்டம் அவர் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமே நடித்த காலகட்டம். பிறகு வயது காரணமாக கதாநாயகனாக நடிக்க முடியாத நிலை சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்டது.
அதற்கு பிறகு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்த பல படங்கள் அவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தன. அப்படி அவர் நடித்த ஒரு முக்கியமான திரைப்படம்தான் தாவணி கனவுகள்.
பாக்யராஜுக்கு வெகு நாட்களாகவே சிவாஜி கணேசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அதனை தொடர்ந்து தாவணி கனவுகள் திரைப்படத்தில் வரும் முக்கியமான கேப்டன் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு சிவாஜி கணேசனிடம் கேட்டுக் கொண்டார் சிவாஜி கணேசனும் அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த படத்தில் உதவி இயக்குனராக பார்த்திபன் வேலை பார்த்து கொண்டிருந்தார். படத்தில் ஒரு போஸ்ட்மேன் கதாபாத்திரத்திற்கு ஆள் தேவைப்பட்டதால் அந்த கதாபாத்திரத்தில் பார்த்திபனையே நடிக்க வைத்தார் பாக்யராஜ். அதில் ஒரு காட்சியில் கேப்டனிடம் பார்த்திபன் லெட்டர் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைவார் கேப்டன்.
இந்த காட்சியை சிவாஜி கணேசன் நடிக்க இருக்கும் பொழுது பார்த்திபனை அழைத்து ஒரு விஷயத்தை கூறினார். நீ நடிப்பதற்கு புதிதாக வந்திருக்கிறாய். இந்த காட்சியை பொருத்தவரை நீ சரியாக நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் அடுத்த காட்சியில் நான் ரத்தத்தை கக்குவது போன்ற காட்சி வரும்.
எனவே ஒருவேளை நீ தவறாக நடித்தால் நான் அடுத்த முறை எடுப்பதற்கு மீண்டும் போய் ஆடையை மாற்றி விட்டு வரவேண்டும். அதற்கு மூன்று மணி நேரம் ஆகும். உன்னுடைய இயக்குனர் தான் படத்தின் தயாரிப்பாளரும். எனவே நீயே யோசித்து முடிவு எடுத்துக்கொள் ஒரே ஷாட்டில் இந்த காட்சியை நடித்து முடிக்க வேண்டும். என்று கூறியுள்ளார் சிவாஜி கணேசன் அதேபோல ஒரே ஷாட்டில் அந்த காட்சியை நடித்து கொடுத்துள்ளார் பார்த்திபன்.