தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகதான் அறிமுகமானார்.
அவர் இயக்கத்தில் வெளிவந்த கோமாளி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவுமே நல்ல வெற்றியை கொடுத்த படமாகும். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே.
இந்த திரைப்படம் அவருக்கு பாக்ஸ் ஆபிஸ் திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு நடிகனாக வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது.
இந்த நிலையில் அடுத்தடுத்து அவர் நடித்த டிராகன், டூட் இரண்டு திரைப்படங்களுமே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப். அடுத்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் இயக்கி நடிக்க இருக்கிறார் பிரதீப்.
எனவே இந்த படத்திற்கு சம்பளத்தை அதிகரித்துள்ளாராம் பிரதீப். தற்சமயம் இவர் சம்பளமாக 25 கோடி ரூபாய் கேட்பதாக கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தயாரிப்பு நிறுவனமும் கூட இந்த தொகையை கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வளவு குறுகிய காலத்தில் 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கும் முதல் ஹீரோ தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.





