Connect with us

பிரபாஸ்க்கிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன்.. என் வாழ்க்கைல கத்துக்கிட்டது அது!.. ஓப்பனாக கூறிய ப்ரித்திவிராஜ்!.

prithiviraj prabas

News

பிரபாஸ்க்கிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன்.. என் வாழ்க்கைல கத்துக்கிட்டது அது!.. ஓப்பனாக கூறிய ப்ரித்திவிராஜ்!.

Social Media Bar

2002 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ப்ரித்திவிராஜ். பிறகு 2005 ஆம் ஆண்டுதான் தமிழ் சினிமாவில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். தமிழை விடவும் இவர் மலையாளத்தில்தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் குறைவான அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட நல்ல வரவேற்பு உண்டு. மலையாளத்தில் சில படங்களை இயக்கி தயாரித்தும் இருக்கிறார் ப்ரித்திவிராஜ்.

தமிழில் அவர் நடித்த திரைப்படங்களில் மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை போன்ற படங்கள் பிரபலமானவை, தற்சமயம் கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் ப்ரித்திவி ராஜ்.

prithiviraj
prithiviraj

பல வருடங்களாக அவர் நடித்து வந்த ஆடுஜீவிதம் திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் இதுவரை 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பு ப்ரித்திவிராஜ் பல யூ ட்யூப் சேனல்களில் இதற்காக ப்ரோமோஷன் செய்து வந்தார்.

அந்த சமயத்தில் ஒரு பேட்டியில் ப்ரித்திவிராஜுடம் பேசும்போது படத்தின் ப்ரோமோஷனுக்கு உங்கள் நணபர் பிரபாஸை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ப்ரித்திவிராஜ் என்னிடம் இல்லை என கூறாத நண்பர்களிடம் நான் எதையும் கேட்க மாட்டேன்.

பிரபாஸிடம் நான் எதை கேட்டாலும் அவர் இல்லை என கூறமாட்டார். அதனால் அவரிடம் நான் எதையும் கேட்பதில்லை. இது என் வாழ்க்கையில் ஒரு விதிமுறையாக பின்பற்றும் விஷயமாகும் என கூறியுள்ளார் ப்ரித்திவிராஜ்.

To Top