Tamil Cinema News
50 வயது நடிகையுடன் தொடர்பு.. ஒவ்வொருவாட்டியும் அதை பண்ணுவார்.. விஷால் குறித்து பேசிய பிரபலம்..!
நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் நெப்போலியனுக்கு பிறகு அவரை போலவே அதிக உயரம் கொண்ட நடிகராக விஷால் இருந்து வருகிறார்.
சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த மலைக்கோட்டை, தாமிரபரணி, சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
அப்படியெல்லாம் நடித்து வந்த விஷால் இப்போது மைக் பிடிக்கவே திணறும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் நிமோனியா காய்ச்சல் வந்ததாகவும் அதனால்தான் இப்படி இருக்கிறார் என்றும் விஷால் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
ஆனால் இதுக்குறித்து மக்கள் மத்தியில் பலவாறு பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் இதுக்குறித்து கூறியுள்ளார். அவர் கூறும்போது தொடர் போதை பழக்கம்தான் விஷாலின் இந்த நிலைக்கு காரணம் என கூறுகிறார்.
மது அடிப்பதால் இப்படி ஆகுமா? என தொகுப்பாளர் கேட்டப்பொழுது மதுவை தாண்டி போதை பொருட்கள் இருக்கின்றன. அவற்றிற்கு எல்லாம் உலக அளவில் அதிக மார்க்கெட் உண்டு. பிரபலங்கள் பெரும்பாலும் அவற்றைதான் பயன்படுத்துகின்றனர் என விளக்கியிருந்தார் தமிழா தமிழா பாண்டியன்.
மேலும் அவர் கூறும்போது எல்லா பிரபலங்களும் போதை பொருட்களை பயன்படுத்தினாலும் கூட அவர்கள் அளவாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ராஜபோதை வேண்டும் என்று விஷால் அதிகப்படியாக எடுத்துக்கொண்டார். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் இருந்த நடிகையுடன் விஷாலுக்கு உறவு உண்டு.
அவர்களுடன் இருக்கும்போது அதிகமாக போதை பொருட்களை பயன்படுத்துகிறார் என கூறியிருந்தார் தமிழா தமிழா பாண்டியன். அவரின் இந்த சர்ச்சை பேச்சு அதிக பிரபலமாகி வருகிறது.
