Connect with us

என்னை தயாரிப்பாளர் ஆக்குனதே கார்த்திக்தான்.. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாழ்க்கை கொடுத்த நவரச நாயகன்!..

karthik

Cinema History

என்னை தயாரிப்பாளர் ஆக்குனதே கார்த்திக்தான்.. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாழ்க்கை கொடுத்த நவரச நாயகன்!..

cinepettai.com cinepettai.com

ரஜினி கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் நடிப்பதற்கு வந்தனர். அப்படி வந்த இளைஞர்களில் நடிகர் கார்த்திக்கும் முக்கியமானவர்.

கார்த்திக் மிக மிக இளம் வயதிலேயே திரைப்படத்திற்கு நடிக்க வந்து விட்டார். ஆனால் முதல் படத்தில் இருந்தே அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வந்தார் கார்த்திக்.

அவர் வளர துவங்கிய பொழுது அவரை சுற்றியுள்ள பலருக்கும் நன்மைகளை செய்ய துவங்கினார். நிறைய நபர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் வாங்கி கொடுத்தார். அப்போது கோகுலகிருஷ்ணன் என்கிற இயக்குனர் கார்த்திக் உடன் மிகவும் நல்ல பழக்கத்தில் இருந்தார் அர்ச்சனை பூக்கள் ஆனந்த கும்மி போன்ற திரைப்படங்களை இயக்கிய கோகுலகிருஷ்ணன் கார்த்திக்கை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் அவர் எழுதி வைத்திருந்த கதையை எந்த தயாரிப்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அப்போது கார்த்தியிடம் வெகுநாட்களாக பழக்கத்தில் இருந்த விநியோகஸ்தர் காஃபரிடம் அந்த கதையை கொண்டு சென்றார் கார்த்திக்.

 நீங்கள் என்னை வைத்து இந்த படத்தை எடுங்களேன் என்று அவருக்கு ஆலோசனை கொடுத்துள்ளார் கார்த்திக். அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் பூவரசன். பூவரசன் திரைப்படம் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

பிறகு அவர்கள் இருவரும் இணைந்து உதவிக்கு வரலாமா என்கிற திரைப்படத்தையும் கூட உருவாக்கினர். அந்த திரைப்படத்திலும் கார்த்திக்தான் கதாநாயகனாக நடித்தார்.

POPULAR POSTS

ajith vijay
lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
To Top