Cinema History
வில்லன் காலில் விழுந்த ரஜினி, சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலையா…அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு?…
Rajini and Raatharavi: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவிலே மிகவும் முக்கியமான நடிகர். தமிழகத்தில் இவருக்கென்று ரசிகர்கள் ஏராளம் ஆறிலிருந்து அறுபது வரையிலும் இவரை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது.
இவர் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இருந்த எதிர்பார்ப்பு அப்படியே இருக்கிறது. எந்த படம் எடுத்தாலும் தனக்கென தனி திறமை, ஸ்டைல், நடிப்பு என்று தன்னை மற்றவர்களுடன் வேறுபடுத்தி காட்டிக்கொள்வார் அது தான் இவருடைய தனிச்சிறப்பு.
அப்படி ஒரு மிகப்பெரிய நடிகர் வில்லன் காலில் விழுந்திருக்கிறார் என்றால் என்ன காரணமாக இருக்கும்.
ஆம் ரஜினி நடிகராக ஜொலித்த காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் ராதாரவி. ரஜினியுடன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் ஒரு முறை நிருபர்கள் சந்திப்பில்தான் யாரும் அறியாத இந்த உண்மையை கூறியிருக்கிறார். அதாவது ஒரு நாள் ரஜினியிடம் இருந்து போன் வந்தது நேரில் வாருங்கள் பேசலாம் என்றார் உடனே ராதாரவியும் ரஜினி இல்லத்திற்கு சென்றிருக்கிறார்.
காலை 8 மணி ராதாரவியை பார்த்தது ரஜினி காலில் விழுந்துள்ளார் பதிலுக்கு ராதாரவியும் ரஜினி காலில் விழுந்துள்ளார். இருவரும் இப்படித்தான் பாசத்தை பறிமாறிக் கொள்வார்களாம்.
உடனே இருவரும் மது அருந்த ஆரம்பித்துவிட்டு அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம் என்று பேட்டி ஒன்றில் ராதாரவி தெறிவித்துள்ளார்.
மேலும் ராதரவி ரஜினிக்கு மிகவும் பிடித்தமான நண்பரும் கூட.ஆரம்ப கட்டத்திலிருந்து பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருப்பதால் சொந்த விஷங்களை பறிமாறிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள்.