Connect with us

பரிதாப நிலையில் சந்தோஷ் நாராயணன்!  என்ஜாயி எஞ்சாமிக்கு என்னதான் ஆச்சு!

santhosh narayanan

News

பரிதாப நிலையில் சந்தோஷ் நாராயணன்!  என்ஜாயி எஞ்சாமிக்கு என்னதான் ஆச்சு!

Social Media Bar

அட்டகத்தி படம் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் கைகோர்த்து இசைப்பணியை தொடர்ந்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இசை அமைப்பாளராக மட்டுமின்றி இசை நிகழ்ச்சிகளையும் இவர் நடத்தி அசத்தி வருகிறார்.

இவர் இசையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான என்ஜாயி எஞ்சாமி இன்றும் ட்ரெண்ட் செட்டில்  இருந்து மாறவில்லை. அதற்கு, கடந்த மாதம் நடந்த சந்தோஷ் நாராயணன் கான்செர்டும் ஒரு காரணம் எனலாம். நிகழ்ச்சியில் எஞ்சாயி எஞ்சாமி பாடல் தான் ஹைலைடே. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று மணி நேரம் எந்தவிதமான சர்ச்சையும் இல்லாமல் நடத்திக் காட்ட்டினார் சந்தோஷ்.

இதற்கு முன்னதாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் இந்த பாடல் அனைவர் முன்னிலையும் பாடப்பட்ட நிலையில், அறிவு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு  அறிவு அமெரிக்காவில் இருந்ததாகவும்  சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்தநிலையில், அடுத்த சர்ச்சையும் கிளம்பியுள்ளது. என்ஜாயி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு குறித்து சந்தோஷ நாராயணன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அனைவருக்கும் தெரிந்தது என்றும் அவர் கூறியுள்ளார். 

இதில் சர்ச்சை என்னவென்றால், இந்த பாடல் மூலம் தங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டு, இதுநாள் வரையில் இந்த பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால்,  தான் சொந்த ஸ்டூடியோவை துவங்க உள்ளதாகவும் தனி இசைக்கலைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இந்த எஞ்சாயி எஞ்சாமி பாடல் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது சற்று வருத்தத்தை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

Articles

parle g
madampatty rangaraj
To Top