Tamil Cinema News
தமிழ்நாட்டின் ராணி நடிகை.. சில்க் ஸ்மித்தா பற்றி வெளிவரும் திரைப்படம்.. வெளியான டீசர்.!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக ஒரு காலகட்டத்தில் இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து அவருக்கான ரசிக பட்டாளம் என்பதே அதிகமாக இருந்து வந்தது.
அப்போதைய சமயங்களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனிப்பட்ட இடம் இருந்து வந்தது. அதில் நிறைய நடிகைகள் அவர்களுக்கு என்று தனி இடத்தை பிடித்தனர்.
அந்த வரிசையில் சில்க் ஸ்மிதா முக்கியமானவராக இருந்தார். தொடர்ந்து சில்க் ஸ்மிதா நடிப்பதாலேயே அவரது திரைப்படங்களை நிறைய பேர் பார்க்க துவங்கினார்கள்.
சில்க் ஸ்மித்தா படம்:
அதனால் படங்களில் ஒரு பாடலாவது சில்க் ஸ்மிதாவிற்கு வைக்கப்பட்டது ஆனால் அவர் வாழ்ந்த காலத்தை விடவும் சில்க் ஸ்மிதா இறந்த பிறகு தான் அவரைக் குறித்து நிறைய மக்கள் மத்தியில் பேச்சுக்கள் வந்தன.
பிறகு அவருடைய வாழ்க்கை கதையை படமாக்க துவங்கினர் அந்த வகையில் ஏற்கனவே ஹிந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்கிற ஒரு திரைப்படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது.
ஆனால் அவரது வாழ்க்கை குறித்து அவ்வளவாக தரவுகள் எதுவும் அந்த திரைப்படத்தில் பார்க்க முடியவில்லை. சில்க் ஸ்மித்தா குறித்து வந்த வதந்திகளை மட்டுமே கொண்டு அந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதே கதையை இப்பொழுது தமிழில் திரைப்படமாக்க முடிவு செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்திற்கு சில்க் ஸ்மித்தா – குயின் ஆஃப் சவுத் என பெயரிடப்பட்டுள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்திரிகா ரவிதான் இந்த படத்தில் நடித்திருந்தார்.