Cinema History
கல்யாணம் பண்ணி வைங்கன்னு வெக்கத்தை விட்டு கேட்டேன்! – ஓப்பன் டாக் கொடுத்த துணிவு நடிகர்!
அஜித் நடித்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. இதில் சின்ன கதாபாத்திரமாக அறிமுகமானாலும் படத்தில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் மோகன சுந்தரம்.
இவர் இதற்கு முன்பு பல பட்டிமன்றங்களில் நகைச்சுவை பேச்சாளராக இருந்தார். இந்த நிலையில் துணிவு படத்தில் இவருக்கு மெய்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இவர் ஒரு பேட்டியில் தனது வாழ்வில் தனக்கு திருமணம் குறித்து நடந்த ருசியான தகவல்களை தெரிவிக்கிறார். சிறு வயது முதலே மோகன சுந்தரத்திற்கு திருமணம் செய்ய வேண்டும் என ஆசை. ஆண்களுக்கு எல்லாம் 21 வயதுதான் திருமணத்திற்கான வயது. எனவே 21 வயது ஆகும்வரை காத்திருந்தார் மோகனசுந்தரம்.
21 வயதில் தனது தந்தையிடம் சென்று அப்பா என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகிட்டு இருக்குது அப்பா என கூறியுள்ளார். உடனே அவரது தந்தை “வெளங்குன மாதிரிதான்” என கூறியுள்ளார்.
ஆனால் அவரது தங்கைகளுக்கு எல்லாம் 18 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. இவரும் 28 வயதுவரை திருமணம் ஆகும் என காத்திருக்கிறார். பிறகு வீட்டில் வேறு விதமாக சொல்லி பார்ப்போம் என கூறி “அப்பா எனக்கு கல்யாணம் ஆனால் அலுவலகத்தில் சம்பளம் ஏத்தி தராங்கலாம் அப்பா” என கூறியுள்ளார்.
ஏண்டா யாராவது இலவச கண்ணாடிக்கு ஆசைப்பட்டு கண் அறுவை சிகிச்சை பண்ணிப்பாங்களாடா என கேட்டுள்ளார் அவரது தந்தை. இப்படியாக இறுதியாக மிகவும் தாமதமாகவே தனக்கு திருமணம் ஆனதாக மோகன சுந்தரம் கூறுகிறார்.