Connect with us

சார் யாரோ பொண்ணுக்கு பரிசு வாங்கியிருக்கார் பாருங்க.. தேவாவை வசமாக கோர்த்து விட்ட ட்ரைவர்!..

music director deva

Cinema History

சார் யாரோ பொண்ணுக்கு பரிசு வாங்கியிருக்கார் பாருங்க.. தேவாவை வசமாக கோர்த்து விட்ட ட்ரைவர்!..

Social Media Bar

நாட்டுப்புற இசையை முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி நாட்டுப்புற இசைக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா.

தேனிசைத் தென்றல் என மக்களால் அழைக்கப்படும் தேவா பல பிரபலமான பாடல்களை கொடுத்துள்ளார். அவரது பாடல்களுக்கு நம்மை எழுந்து நடனமாட செய்யும் அளவிற்கு திறன் பெற்றவர் தேவா. தேவா ஒரு பேட்டியில் அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

ஒருமுறை கேரளாவிற்கு சுற்றுலா செல்லவிருந்தார் தேவா. அப்பொழுது அவரது குரூப்பில் கோரஸ் பாடும் பெண்கள் தேவாவிடம் திரும்ப வரும் பொழுது தனக்கு மஞ்சள் வாங்கி வரும்படி கேட்டுள்ளனர். ஏனெனில் கேரளாவில் சபரிமலையில் விற்கும் மஞ்சள் நன்றாக இருக்கும் என்று அவர்கள் கேள்விப்பட்டிருப்பதால் அவ்வாறு கூறியிருந்தனர்.

தேவாவும் கேரளா சென்றவுடன் அவர்களுக்காக மஞ்சள் வாங்கி வைத்திருந்தார். ஆனால் அதை அவர்களிடம் கொடுக்க மறந்து விட்டார் அவர் கேரளாவை விட்டு வந்து ஒரு வாரம் கழித்து அவரது காரில் அந்த மஞ்சளை பார்த்த ஓட்டுநர் அதை வேகமாக எடுத்துச் சென்று தேவா மனைவியிடம் கொடுத்து ஐயா யாரோ ஒரு பெண்ணுக்கு மஞ்சள் வாங்கி இருக்கிறார் பாருங்கள் என்று கூறிவிட்டார். இந்த விஷயத்தை அவர் இந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top