Cinema History
என்னைய அவதூறா பேசுனா உங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு போல.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் நடந்த பஞ்சாயத்து!..
திரைத்துறையில் உச்சத்தில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் நடிகை லதாவை காதலித்ததாகவும், அதற்காக எம்.ஜி.ஆர் அவரை போயஸ் கார்டனுக்கு அழைத்து தாக்கியதாகவும் ஒரு பேச்சு உண்டு. ஆனால் அந்த சம்பவம் உண்மையா என தெரியவில்லை.
ஆனால் எந்த காரணத்தினாலோ தொடர்ந்து அதிமுக மீது கோபமாக இருந்து வந்தார் ரஜினிகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு செல்வி ஜெயலலிதா வந்த பிறகும் கூட இந்த கோபம் அவரிடம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு நிகழ்வை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். விழா ஒன்றிற்கு வழக்கமாக செல்வது போல சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
அப்போது மேடையில் இறுதியாக ஏறிய நபர் ஜெயலலிதா குறித்து விமர்சித்து பேசியுள்ளார். ரஜினிகாந்த் அதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்துள்ளார். இந்த நிலையில் நிகழ்வு முடிந்த பிறகு ஜெயலலிதா அலுவலகத்தில் இருந்து ரஜினிகாந்திற்கு போன் வந்துள்ளது. ஜெயலலிதா உங்களை சந்திக்க வேண்டும் என கூறினார் என அவரது அலுவலர் கூறுகிறார்.
எனவே ரஜினியும் ஜெயலலிதா வீட்டு வாசலுக்கு செல்கிறார். அங்கு வாசலிலேயே இருக்கும் இண்டர்காம் போன் மூலம் ரஜினியிடம் பேசிய ஜெயலலிதா “நீங்கள் சென்ற நிகழ்வில் என்னை குறித்து அவதூறாக பேசியுள்ளனர். அதற்கு நீங்கள் எந்த கருத்தும் ஏன் தெரிவிக்கவில்லை” என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ரஜினி அவர் பேசியதோடு விழா முடிந்துவிட்டது. பிறகு எப்படி நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச முடியும். என கூறியுள்ளார். இல்லை நீங்கள் அந்த பேச்சை ரசித்து கேட்டதாக கேள்விப்பட்டேன் என கூறி வாசலில் இருந்தே ரஜினியை அனுப்பி வைத்தாராம். இவ்வாறு செய்யாறு பாலு கூறியிருந்தார்.
ஜெயலலிதா தலைமையில் வீரப்பனை ஒழித்துக்கட்டிய பிறகுதான் ஜெயலலிதாவும் ரஜினியும் ராசி ஆனதாக சில தகவல்கள் உண்டு.
