Connect with us

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

ar murugadoss ajith

Cinema History

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக ரசிகப்பட்டாளத்தை கொண்டவராக நடிகர் அஜித் இருக்கிறார். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போட்டியால் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. அதே போல விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை.

அஜித்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீனா. தீனா திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்தது. தீனா படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து கஜினி படத்தை இயக்க இருந்தார் முருகதாஸ். இந்த நிலையில் கஜினி படத்தில் அஜித் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது. ஆனால் அப்போது படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ் சக்ரவர்த்திக்கும் அஜித்திற்கும் இடையே சண்டையானது.

எனவே முருகதாஸிடம் சென்ற அஜித். நீங்கள் இந்த தயாரிப்பாளரை விட்டு வந்துவிடுங்கள். நாம் வேறு தயாரிப்பாளரை வைத்து படம் பண்ணுவோம் என கூறியுள்ளார். இதுக்குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ அஜித்தை விட்டு வாருங்கள் இதே கதையை வேறு ஹீரோ வைத்து எடுப்போம் என கூறியுள்ளார்.

இதனை கேட்டு முருகதாஸும் ஒப்புக்கொண்டார். இறுதியாக அந்த படத்தை சூர்யாவை வைத்து எடுத்தனர். இதனால் முருகதாஸும் அஜித்தும் எதிரிகளாகிவிட்டனர் என கூறப்படுகிறது.

To Top