Latest News
என்னய்யா இது என் வீட்டு பத்திரத்தையா கொடுத்தேன்!.. 40 பேரை அழைத்து வந்த இயக்குனர்!.. கடுப்பான வாலி!..
கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறப்பான ஒரு கவிஞராக அறியப்படுபவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் சினிமாவில் இருந்த சமகாலத்திலேயே வாலியும் சிறப்பான வரவேற்பை பெற்றார். இதனால் ஆரம்பத்தில் கண்ணதாசனுக்கு வாலியை பிடிக்காமல் இருந்தது.
ஆனால் போக போக வாலியின் திறமையை கண்டு கண்ணதாசனே வியந்து போனார். கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி விஜய் அஜித் படங்கள் வரை பாடல் வரிகள் எழுதியவர் வாலி. ஆனால் கண்ணதாசனுக்கும் வாலிக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் அவர்களை கொஞ்சம் அவமரியாதையாக நடத்தினாலும் கோபமடைந்துவிடுவார்கள்.
அப்படியாக ஒரு புது இயக்குனர் அவரது திரைப்படத்திற்கு தேவா இசையமைக்க வேண்டும் என கேட்டிருந்தார். அவர் வரும்போதே கூடவே 40 உதவி இயக்குனர்களை அழைத்துக்கொண்டு வந்தார். தேவா இசையமைத்த பிறகு கவிஞர் வாலிதான் பாடல் வரிகள் எழுத வேண்டி இருந்தது.
பொதுவாக வாலி பாடல் வரிகளை எழுதினால் அதை படித்து பார்க்கும் இயக்குனர் சில சமயங்களில் ஏதாவது மாற்றி கேட்பதுண்டு. வாலியும் மாற்றி கொடுப்பதுண்டு. ஆனால் இந்த இயக்குனரிடம் பாடல் வரிகளை எழுதி கொடுத்தப்பிறகு அவர் அந்த 40 உதவி இயக்குனர்களிடமும் பாடல் வரிகளை கை மாற்றி விட்டார்.
ஒவ்வொருவராக அந்த பாடல் வரிகளை படிக்கவும் அதை பார்த்து கடுப்பானார். கவிஞர் வாலி. யோவ் நான் என்ன என் சொத்து பத்திரத்தையா கொடுத்திருக்கேன். படிச்சிட்டு உடனே கொடுங்கையா என சத்தம் போட்டுள்ளார். இந்த நிகழ்வை தேவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.