Connect with us

விஜய்க்காக எழுதின கதையில் நடித்த அஜித்!.. உண்மையை சொன்ன சுந்தர் சி!..

sundar c

Latest News

விஜய்க்காக எழுதின கதையில் நடித்த அஜித்!.. உண்மையை சொன்ன சுந்தர் சி!..

cinepettai.com cinepettai.com

சுந்தர் சி தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறக்கூடியவையாக இருக்கின்றன. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகவே இருக்கும்.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முக்கியமான காமெடி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார் சுந்தர் சி என கூறலாம். அதே சமயம் அவர் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு ஆசைப்பட்டார் சுந்தர் சி. இந்த நிலையில் உன்னை தேடி என்கிற திரைப்படத்தின் கதையை அப்போதே எழுதி வைத்திருந்தார் சுந்தர் சி. விஜய்யை பொறுத்தவரை சிவாஜி கணேசன் மாதிரியே படக்கதையை முழுவதுமாக கேட்டுவிட்டுதான் அதில் நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வார்.

sundar-c
sundar-c

ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை அவருக்கு கதை சொல்வதற்கே அவ்வளவாக வராது. இந்த நிலையில் அந்த படத்தின் கதையை சுருக்கி கூறியுள்ளார் சுந்தர் சி. அதனால் விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை. பிறகு அஜித் சுந்தர் சி இயக்கத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்ததால் அந்த படத்தை அஜித்தை வைத்து படமாக்கினார் சுந்தர் சி.

இதுக்குறித்து சுந்தர் சி கூறும்போது விஜய்யை வைத்து படமெடுக்க வெகு காலங்களாகவே திட்டமிட்டேன். இதற்காக விஜய்யிடம் பல முறை பேசியிருக்கிறேன். ஆனால் அவரை வைத்து படம் இயக்க வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

To Top