கண்ணதாசனுக்கு பாடை கூட நான் சொல்றப்படிதான் இருக்கணும்!.. மேஜர் சுந்தர் ராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்!.

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை என கூறலாம். அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த எந்த ஒரு நடிகரையும் விட மதிப்பு வாய்ந்தவராக நடிகர் எம்.ஜி.ஆர் இருந்தார். இதனாலேயே அவரிடம் வாய்ப்பு வாங்குவதற்காக வரிசையில் நின்றனர் தயாரிப்பாளர்கள்.

அதே போல எம்.ஜி.ஆர் அவரது திரைப்படங்களில் நிறைய விதிமுறைகளை போடுவார். அவர் நடிக்கும் படங்களில் உள்ள நடிகர்களில் துவங்கி படத்தின் கதை, பாடல் என அனைத்துமே எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கும்.

அதில் ஏதேனும் ஒன்று எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்றாலும் உடனே அதை மாற்றிவிட வேண்டும். ஆனால் அதே விஷயத்தை ஒரு நபரின் இறப்பிலும் செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அது வேறு யாரும் அல்ல கண்ணதாசனின் இறப்பில்தான்.

MGR
MGR
Social Media Bar

கண்ணதாசனின் இறப்பிற்கு தாமதமாகவே வந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்காக காத்திருந்து பார்த்துவிட்டு அவர் வர தாமதமாகும் என பாடையை எல்லாம் கட்டி அதில் கண்ணதாசனையும் வைத்துவிட்டனர். அப்போதுதான் அங்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

பாடையை பார்த்த எம்.ஜி.ஆர். கண்ணதாசன் முகம் தெரியாத மாதிரி இப்படியா பாடையை கட்டுவீர்கள் என கூறி முழுவதுமாக அதை அவிழ்த்து மீண்டும் கட்ட சொல்லியுள்ளார். இந்து மத மரபுப்படி ஒருவரது உடலை பாடையில் ஏற்றிவிட்டால் திரும்ப சுடுக்காட்டில்தான் கீழே இறக்க வேண்டும்.

ஆனால் எம்.ஜி.ஆர் அடம் பிடித்ததால் கண்ணதாசன் பிரேதத்தை கீழே இறக்கி மீண்டும் பாடையை வேறு மாதிரி மாற்றி கட்டி அவரது உடலை ஏற்றியுள்ளனர். மேஜர் சுந்தர் ராஜன் ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை தெரிவித்துள்ளார்.