News
சனிக்கிழமை மட்டும் கோபப்படும் ஹீரோ!.. வித்தியாசமான கதையில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா!..
SJ Surya : தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் நடிகர்களில் முக்கியமானவராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் அவரது திரைப்படத்தை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
எனவே அவரும் அதற்கு தகுந்தார் போல தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் எஸ்.ஜே சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் நானி கூட்டணியில் சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.
புதுக்கதை:
தெலுங்கு நடிகர் நாணியம் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் தற்சமயம் நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் தென்னிந்திய அளவிலேயே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

சண்டை காட்சிகள் பெரிதாக இல்லாத திரைப்படங்களை கூட நானி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த வகையில் இந்த சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படத்தின் கதை களமே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
அதாவது படத்தின் கதைப்படி கதாநாயகன் வாரத்தில் ஆறு நாட்களும் மிகவும் அமைதியாக இருக்கக்கூடியவர். அந்த நாட்களில் யாரேனும் அவரிடம் சண்டை போட்டால் கூட திரும்ப அடிக்க மாட்டார்
ஆனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையை கோபப்படுவதற்கான நாளாக வைத்திருப்பார் கதாநாயகன். அந்த சனிக்கிழமை நாளில் மிகுந்த கோபக்காரராகவும் சண்டை செய்பவராகவும் இருப்பார். இந்தப் படத்தில் கதாநாயகனாக நானியும் போலீஸ் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
